Archive for மார்ச் 29, 2010

விக்கிப்பீடியா மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் கட்டுரைப்போட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியவும் தமிழ்நாடு அரசும்
இணைந்து நடத்தும் உலகத்தமிழ் இணையமாநாட்டுக்கான கட்டுரைப்
போட்டியில் தமிழர்கள் அனைவரும் பங்குபெற்று தமிழின் பெருமையை
உலகறியச்செய்யவேண்டும் என்பதற்கான சிறப்புப்பதிவு.

ஒன்பதாவது உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுடன் இணையத்தமிழ்
செம்மொழி மாநாட்டையும் வரும் 2010-ஆம் ஆண்டு சூன் மாதம்
23-ம் திகதி முதல் சூன் 27-ம் திகதி வரை கோயம்புத்தூரில் நடத்த
தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்து அதற்கான முழு ஈடுபாட்டுடன் ஆயத்தப்
பணிகளை செய்து வருகிறது.தமிழ்நாடு அரசு உலகத் தமிழ் இணையதள
மாநாட்டுக்காக அனைத்து தமிழ் மாணவர்களுக்கும் கட்டற்ற
களஞ்சியமான விக்கிப்பீடியாவுடன் இணைந்து வலைவாசல் கட்டுரைப்
போட்டியை நடத்துகிறது.இப்போட்டியில் கலை,அறிவியல்,பொறியியல்,
மருத்துவம்,விளையாட்டு, வேளாண்மை, சட்டம்,கல்வியியல்,
இயங்குனர் மருத்துவம் (பிசியோ தெரப்பி),சித்த மருத்துவம்,பல்
மருத்துவம்,செவிலியர், கால்நடை மருத்துவம்,பல்தொழில்நுட்பப்
பயிலகம் முதலியதுறைகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கு
கொள்ளலாம். ஒவ்வொரு துறையிலும் சிறந்த தகவல் பக்கங்களை
எழுதுவோருக்குப் மதிப்பு மிகுந்தபரிசுகள் வழங்கப்பட உள்ளன.

போட்டிக்கான விதிமுறைகள்:

1. தகவல் பக்கங்கள் (கட்டுரைகள்) ஆதாரங்களின் அடிப்படையில்
நடுநிலைமையுடன் அமையவேண்டும். இனம், சமயம், அரசியல்,
தனிநபர் குறை, வேறுபாடுகள் தொடர்பாக வெறுப்பைத் தூண்டாதவாறு,
தமிழ் விக்கிப்பீடியாவுக்கு ஏற்றதாக அமைய வேண்டும்.
2. தகவல் பக்கங்களில் உள்ள சொற்களின் எண்ணிக்கை 250 முதல் 500
வரை அமைய வேண்டும். (இரண்டு A4 தாள் பக்க அளவு)
3. தகவல் பக்கங்கள் ஒருங்குறியில் (Unicode) அமைய வேண்டும்.
4. தகவல் பக்கங்களை ஏப்ரல் 30, 2010க்குள் நிறைவு செய்து
http://tamilint2010.tn.gov.in இணையத் தளத்தின் வழியாக
அனுப்ப வேண்டும்.
5. தகவல் பக்கங்களின் உரிமை போட்டி அமைப்பாளர்களையே சாரும்.
6. மேலும் விபரங்களும், கூடுதல் விபரங்களுக்கான இணைப்புக்களும்
இந்தப் பக்கத்தில் தரப்பட்டுள்ளன. தகவல் பக்கங்களை எழுதும் முன்
இங்கு தரப்பட்டுள்ள விபரங்களை வாசித்துப் புரிந்துகொள்வது முக்கியம்.
7. தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல் பக்கங்கள் உலகளாவிய தமிழ் விக்கிப்
பீடியாவில் சேர்க்கப்படும்.
8. தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.

மேலும் இதைப்பற்றிய கூடுதல் தகவல் தெரிந்துகொள்ள

http://ta.wikipedia.org/wiki

வின்மணி இன்றைய சிந்தனை
தாய் நாட்டில் படித்து வெளிநாட்டில் பணத்துக்காக வேலைசெய்யும்
தாயை மறந்தவரைவிட விட, தாய் நாட்டிற்காக விவசாயம் செய்யும்
உழவர் மேன்மையானவர்.

இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
PHP Directory Functions
opendir()   Opens a directory handle
readdir()   Returns an entry from a directory handle
rewinddir() Resets a directory handle
scandir()   Lists files and directories inside a
            specified path
இன்று மார்ச் 29 
2007 ஆம் ஆண்டு மார்ச் 29-ம் நாள்
கணிதத்திலும் புள்ளியியலிலும் நிகழ்தகவுக்
கோட்பாட்டில் தற்காலத்தில் சிறப்பு பெற்று
மதிப்பு மிக்க கணிதத்தில் நோபல் பரிசு எனப்படும்
நோர்வே நாட்டின் ஏபல் பரிசு தமிழரான சீனிவாச
வரதனுக்கு அறிவிக்கப்பட்டது.

மார்ச் 29, 2010 at 11:01 பிப 17 பின்னூட்டங்கள்


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

மார்ச் 2010
தி செ பு விய வெ ஞா
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...