குழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.
ஏப்ரல் 20, 2012 at 8:50 முப பின்னூட்டமொன்றை இடுக
விடுமுறை தொடங்கியாச்சு நம் வீட்டு சுட்டிகளின் சேட்டைகளை குறைத்து அவர்களின் ஞாபகசத்தி மற்றும் எளிதில் புரிந்து கொள்ளும் திறன் போன்றவற்றை வீடியோவுடன் சொல்ல ஒரு தளம் வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
புத்தகத்தை கொடுத்து படி என்றால் குழந்தைகளுக்கு சற்றே முகம் சுழிக்கும், எப்படி படிக்க வேண்டும் என்பதை நாம் சொல்லி கொடுப்பதை விட வீடியோ மூலம் சிறு குழந்தைகள் எப்படி எல்லாம் படிக்கின்றனர் என்பதை காட்டினால் போதும் அவர்களின் அறிவு மேலும் வளரும் அரிய பல நுனுக்கங்களையும் எளிதாக கற்றுக்கொள்ள ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.neok12.com
இத்தளத்திற்கு சென்று குழந்தைகளின் அறிவை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்களை எளிதாக பார்க்கலாம். Physical videos, Life Sciences , Human body , Earth & Space , Geography , Social Studies , English , Math , History , Games , Activities போன்ற பல்வேறு துறைகளில் எந்தத்துறை சார்ந்த வீடியோக்கள் பார்க்க வேண்டுமோ அதை சொடுக்கி அதிகப்படியான் வீடியோக்களை பார்க்கலாம்.ஓவ்வொரு வீடியோவும் குழந்தைகளுக்கு பயனுள்ள வீடியோவாகவே இருக்கிறது.ஓயாமல் படி படி என்று சொல்வதை விட இது போல் குழந்தைகளுக்கு வீடியோ மூலம் அறிவை புகட்டும் தளங்களை தெரியப்படுத்தினால் அவர்களின் அறிவு மேலும் பெருகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.இத்தளத்தை
அறிமுகப்படுத்துவதில் வின்மணி பெருமிதம் கொள்கிறது !.
1 நிமிட வீடியோ கோப்புகளை பிளாஷ் கோப்புகளாக ஆன்லைன் மூலம் இலவசமாக மாற்றலாம்.
வீடியோ மெயில் உலகில் எங்கிருந்தும் ஆன்லைன் மூலம் இலவசமாக அனுப்பலாம்.
வீடியோ எடிட்டிங் செய்ய உதவும் அசத்தலான இலவச ஹாலிவுட் மென்பொருள்.
வீடியோ சாட்டிங் ( Free Video Conferencing ) முகம் மட்டும் பார்த்து பேசலாம் புதுமையிலும் புதுமை.
தினம் ஒரு புத்தகம் குன்றக்குடி அடிகளார் அவர்கள் எழுதிய " வாழ்க்கை நலம் " புத்தகம் தறவிரக்க இங்கு சொடுக்கவும்.
வின்மணி சிந்தனை அட்சயதிருதியை நாளில் நான்கு பேருக்கு அன்னதானம் செய்தாலே செல்வம் நம்மை தேடி வரும்.
இன்று ஏப்ரல் 20
பெயர் : சிட்டி பெ. கோ. சுந்தரராஜன் பிறந்த தேதி : ஏப்ரல் 20, 1910 மணிக்கொடிக் கால எழுத்தாளர், திரைப்பட விமர்சகர், பட்டதாரி ஆசிரியர். அகில இந்திய வானொலியின் இதழ்ப் பொறுப்பாசிரியராகவும் முதுநிலை நிருபராகவும் 1968 வரை பணி புரிந்தவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியர்.ஆதியூர் அவதானி - முதல் தமிழ்க் கவிதை நூலை வெளியிட்டவர்.
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், குழந்தைகள் பகுதி, தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்.
Subscribe to the comments via RSS Feed