Archive for மார்ச் 12, 2010
உங்கள் வார்த்தைக்கேற்ற படங்களை இனி எளிதாக பெறலாம்.
செய்யுள் , பாடம் , நாவல் எழுதும் ஆசை உள்ள நண்பர்களுக்கு
அவர்கள் பல நேரங்களில் எழுதும் செய்யுளுக்கோ அல்லது
பாடத்துக்கோ, நாவலுக்கோ தகுந்த மாதிரி படம் அமைய
வில்லையே என்ற வருத்தம் இருக்கும் இனி உங்களுக்கு அந்த
பிரச்சினை இருக்காது. ஆம் உங்கள் கதையில் குழந்தைகள்
சிரிப்பது பற்றிய படம் தேவையானதாக இருந்தால் உடனடியாக
இந்த இணையதளத்திற்கு சென்று படம் 1-ல் இருப்பது போல்
உங்களுக்கு எந்த வார்த்தைக்கான படம் தேவையோ அந்த
வார்த்தையை கொடுக்கவும், உதாரணமாக நாம் Smile baby
என்ற வார்த்தையை கொடுத்து தேடியுள்ளோம்.
சில நொடிகளில் தேடுதல் முடிவை நமக்கு காட்டுகிறது.முடிவும்
மிகச்சரியாகத்தான் இருக்கிறது படம் 2-ல் காட்டப்பட்டுள்ளது.
இதனுடன் கூடவே நாம் கொடுத்த வார்த்தைக்கான பொருள்
என்ன என்பதையும் இந்த வார்த்தையை எப்படி உச்சரிக்கவேண்டும்
என்பது பற்றியும் தெளிவாக உள்ளது.ஆனால் படம் கருப்பு
வெள்ளையில் தான் உள்ளது.கூகுளால் கூட இந்த அளவுக்கு
தேடுதல் முடிவு சரியாக கொடுக்க முடியுமா என்று தெரியவில்லை
கண்டிப்பாக இந்த தளம் பிராஜெக்ட் செய்யும் மாணவர்களுக்கு
ரிப்போர்ட் செய்யும் போது படம் தேவையானதாக இருந்தால்
கண்டிப்பாக இந்த தளம் உதவும்.
இணையதள முகவரி : http://www.rhymes.net
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் PHP Joining the array elements into a single string General Form: join(separator,arrayname); (or) implode(separator,arrayname); Eg: $arraystring=array("T","Echonlogy","winmani"); implode("/",$arraystring); Output : T/Echonlogy/winmani
இன்று மார்ச் 12 1954 ஆம் ஆண்டு மார்ச் 12 ம் தேதி சாகித்ய அகாதெமி இந்திய அரசினால் தொடங்கப்பட்டது. சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும்.பரிசுத் தொகையாக 40,000 ரூபாயும், ஒரு விருதும் வழங்கப்படுகிறது. சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான எழுத்தாக்கத்திற்கு இவ்விருது வழங்கப்படுகிறது.