திறமையான ‘சுடோ’ சுடுக்கு பேப்பரில் பிரிண்ட் செய்து விளையாடலாம்.
மார்ச் 12, 2011 at 7:38 பிப 1 மறுமொழி
மனதை ஒருநிலைப்படுத்தும் விளையாட்டுகளில் ஒன்று தான்
சுடோ என்று சொல்லக்கூடிய சுடுக்கு விளையாட்டு. இந்த
சுடோ விளையாட்டை பேப்பரில் பிரிண்ட் செய்து விளையாட
நமக்கு ஒரு தளம் உதவி செய்கிறது இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.
விடுபட்ட எண்களை கட்டத்திற்குள் பொருத்தமாக நிரப்ப
வேண்டும் ஒரே Row மற்றும் Column -ல் வந்த எண்
மீண்டும் வரக்கூடாது இது தான் போட்டியின் விதிமுறை.
மனதை ஒருநிலைப்படுத்த முடியாமல் தவிப்பவர்களிடம்
உளவியல் ஆய்வாளர்கள் கொடுக்கும் மிக முக்கியமான
பயிற்சி தான் இந்த சுடோ விளையாட்டு. சாதாரன கைப்பேசி
முதல் ஆன்லைன் வரை சுடோ விளையாட்டு விளையாட
பல தளங்கள் இருந்தாலும் பேப்பரில் பிரிண்ட் செய்து சுடோ
விளையாட்டு விளையாடுவதில் கிடைக்கும் மகிழ்ச்சியே
தனிதான். சுடோ விளையாட்டு பிரிண்ட் செய்வதற்கு
உதவியாக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://qualitysudokus.com
இந்ததளத்தில் சுடோ நான்கு நிலைகளில் உள்ளது 1.Easy, 2.Medium,
3.Hard, 4.Very Hard. இதைத்தவிர 8 புதுமையான வடிவங்களிலும்
கிடைக்கிறது. தினமும் புதிது புதிதாக சுடோ மாறிக்கொண்டே
இருக்கிறது இதில் சென்று திறமையான சுடோ விளையாட்டை
எளிமையாக தேர்ந்தெடுக்கலாம், தேர்ந்தெடுத்த பின் தரவிரக்கி
பிரிண்ட் செய்து விளையாடலாம். மனதை ஒருநிலைப்படுத்த
நினைப்பவர்களுக்கும் சுடோ பிரியர்களுக்கும் இந்தப்பதிவு
பயனுள்ளதாக இருக்கும்.
சுதந்திர மென்பொருள் டாப் 5 – 3D Realtime விளையாட்டு இலவசம்
கணினியில் வந்திருக்கும் புது விளையாட்டு என்ன என்பதை வீடியோவுடன் அறியலாம்.
விளையாட்டு செய்திகளை உங்கள் பிளாக்-ல் தெரிய வைப்பது எப்படி
சோனி அறிமுகபடுத்த இருக்கும் அடுத்த தலைமுறைக்கான விளையாட்டு கருவி
குழந்தைகளுக்கு கணித அறிவை வளர்க்கும் விளையாட்டுகள்
ஒரே இடத்தில் ஆயிரம் அறிவை வளர்க்கும் விளையாட்டுகள்
வின்மணி சிந்தனை மனதை ஒருநிலைப்படுத்தி எந்த ஒரு செயலை செய்தாலும் வெற்றி எப்போதும் நம் பக்கம் இருக்கும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.வாழ் - என்னும் வேர்ச்சொல்லின் விணையாலணையும் பெயர் என்ன ? 2.ஆற்று - என்னும் வேர்ச்சொல்லின் விணையாலணையும் பெயர் என்ன ? 3.வெல் என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சம் என்ன ? 4.ஓசை, ஐவர், எருது, அன்பு - அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்க ? 5.வழக்கு , வசை, வானம் , வாழ்வு - அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்க ? 6.எருது,எழில்,எட்டு,ஏணி -அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்க? 7.முரசு,மலை,மூங்கில்,மீதி-அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்க? 8.ஒளவை,ஒடம்,ஒட்டகம்,ஐந்து -அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்க ? 9.வகுத்து பாடுவது பிள்ளைத்தமிழ் என்னும் இலக்கியம் பத்துப் பருவங்களாக - இதனை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்கு ? 10.’புதைந்து’ இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க ? பதில்கள்: 1.வாழாதார்,2.ஆற்றாரும்,3.வென்று, 4. அன்பு, எருது, ஐவர், ஓசை,5.வசை,வழக்கு,வாழ்வு, வானம், 6.எட்டு, எருது, எழில், ஏணி, 7.மலை, மீதி ,முரசு, மூங்கில், 8.ஐந்து, ஒட்டகம், ஒடம், ஒளவை, 9.பத்துப் பருவங்களாக வகுத்துப்பாடுவது பிள்ளைத்தமிழ் என்னும் இலக்கியம், 10.புதை.
இன்று மார்ச் 12 1954 ஆம் ஆண்டு மார்ச் 12 ம் தேதி சாகித்ய அகாதெமி இந்திய அரசினால் தொடங்கப்பட்டது. சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும்.பரிசுத் தொகையாக 40,000 ரூபாயும், ஒரு விருதும் வழங்கப்படுகிறது. சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான எழுத்தாக்கத்திற்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: திறமையான ‘சுடோ’ சுடுக்கு பேப்பரில் பிரிண்ட் செய்து விளையாடலாம்..
1. Alad | 11:34 முப இல் மார்ச் 13, 2011
Nice try to post manything like Google Scribe