ஆன்லைன் மூலம் புகைப்படங்களை அழகுபடுத்தாலம் சிறந்த எஃபெக்ட் கொடுக்கலாம் உதவும் பயனுள்ள தளம்.
ஓகஸ்ட் 23, 2011 at 11:16 முப 13 பின்னூட்டங்கள்
நம்மிடம் இருக்கும் புகைப்படங்களை எளிதாக ஆன்லைன் மூலம் தேவையான பகுதியை வெட்டி எடுக்கலாம், கலர் திருத்தம் செய்யலாம்,இவை எல்லாவற்றையும் விட சிறந்த முறையில் நம் புகைப்படங்களுக்கு எஃபெக்ட் கொடுக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
ஆன்லைன் மூலம் புகைப்படங்கள் வைத்து வேலை செய்ய நாளும் ஒரு தளம் வந்து கொண்டிருக்கும் நிலையில் புதிதாக மேம்படுத்தப்பட்ட சேவைகளுடன் புகைப்படத்தை வைத்து பல அழகான வேலைகள் செய்ய ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி :http://ipiccy.com
இத்தளத்திற்கு சென்று நாம் Start Editing என்பதை சொடுக்கி வரும் திரையில் Upload Photo From Pc என்பதை சொடுக்கி நம்மிடம் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவும். இனி இடது பக்கம் இருக்கும் டூல்களின் உதவியுடன் புகைப்படத்தில் என்னவெல்லாம் மாற்றம் செய்ய வேண்டுமோ அத்தனையையும் நாம் எளிதா ஒரே சொடுக்கில் செய்யலாம். கார்டூனாக மாற்றுவதில் இருந்து பென்சில் டிராயிங், ஆர்டிஸ்ட் பெயிண்டிங், பாப் ஆர்ட் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் அந்த அளவிற்கு புதிதாக அழகாக பல சேவைகளை இத்தளம் கொடுக்கிறது.புகைப்படத்தை அழகுபடுத்தியபின் Save and Share என்ற பொத்தானை சொடுக்கி சேமிக்கலாம் நம் நண்பர்களுடனும் ஆன்லைன் மூலம் பகிர்ந்து கொள்ளலாம். புகைப்படத்தை அழகுபடுத்த நினைப்பவர்கள் இனி எந்த
மென்பொருள் உதவியும் இன்றி எளிதாக ஆன்லைன் மூலம் அதுவும் சில நிமிடங்களில் நம் புகைப்படத்தை அழகுபடுத்தலாம். புகைப்படத்தை வித்தியாசமாக மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் அழகுபடுத்த நினைப்பவர்களுக்கு இத்தளம் பயனுள்ளதாக
இருக்கும்.
ஆன்லைன் -ல் புகைப்படங்களை வெட்ட , அளவுகளை மாற்ற உதவும் அசத்தலான இணையதளம்.
நம் புகைப்படத்துக்கு அழகான இமெஜ் எபெக்ட்ஸ் ( Image Effects ) நொடியில் ஆன்லைன் மூலம் செய்யலாம்.
புகைப்படங்களை பெரியதாக்கவும் சிறியதாக்கவும் உதவும் பயனுள்ள இலவச மென்பொருள்.
பெரிய புகைப்படங்களின் அளவை சுருக்காமல் உங்கள் வலைப்பூவில் காட்டஅருமையான வழி.
வின்மணி சிந்தனை அழகான தனிமையில் இசை கேட்கும் போது நம் மனிதில் இருக்கும் வலிகள் காணாமல் போகும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.Indian Diamond Institute எங்குள்ளது ? 2.இந்திய அரசியலமைப்புச்சட்டம் உருவாக்கப்பட்ட போது எத்தனை அட்டவணைகள் இருந்தன ? 3.இந்தியக்குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே தலைவர் யார் ? 4.இந்தியாவில் இரண்டாவது பொதுத்தேர்தல் எப்போது நடைபெற்றது ? 5.மக்களவை உறுப்பினர்கள் எவ்வகை தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர் ? 6.வடகிழக்கு பருவக்காற்றின் மற்றுமொரு பெயர் என்ன ? 7.இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் காணப்படும் அட்டவணைகள் எத்தனை ? 8.இந்திய துணைக்குடியரசுத்தலைவர் எந்த வகையான தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார் ? 9.இந்தியாவின் வைர நகரம் என்று அழைக்கப்படும் நகரம் எது ? 10.இந்தியாவின் ஆப்பிள் மாநிலம் எது? பதில்கள்: 1.சூரத், 2. 8, 3.நீலம் சஞ்சிவ ரெட்டி, 4.1957, 5.நேரடித் தேர்தல், 6.பின்னடையும் பருவக்காற்று, 7.12, 8.மறைமுகத் தேர்தல், 9.சூரத், 10.இமாச்சலப்பிரதேசம்.
இன்று ஆகஸ்ட் 23
பெயர் : வ. ராமசாமி, மறைந்த தேதி : ஆகஸ்ட் 23, 1951 தமிழ் வசனநடையில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய ஒரு முன்னோடி. வ. ராமசாமி ஒரு முற்போக்கு சிந்தனையாளராகவும் தமிழ்நாட்டின் சுதந்திர போராட்ட வீராகவும் விளங்கினார்.அய்யங்கார்கள் பூணூல் அணிவது வழக்கம், இவர் அதைத் தவிர்த்தார்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: ஆன்லைன் மூலம் புகைப்படங்களை அழகுபடுத்தாலம் சிறந்த எஃபெக்ட் கொடுக்கலாம் .
1. selvamurali | 11:44 முப இல் ஓகஸ்ட் 27, 2011
GOOD APPLICATION
2. winmani | 2:51 பிப இல் ஓகஸ்ட் 27, 2011
@ selvamurali
மிக்க நன்றி
3. krishnamoorthy.s | 12:25 பிப இல் ஓகஸ்ட் 27, 2011
மிகப் பிரமாதம் சரியான நேரத்தில் கொடுத்துள்ளிர்கள்
நன்றி
4. winmani | 2:51 பிப இல் ஓகஸ்ட் 27, 2011
@ krishnamoorthy.s
மிக்க நன்றி
5. admin | 2:43 பிப இல் ஓகஸ்ட் 27, 2011
தங்கள் வலைப்பூ “தேன்கூடு” திரட்டியில் இணைக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
6. winmani | 2:54 பிப இல் ஓகஸ்ட் 27, 2011
@ admin
மிக்க நன்றி
7. azae | 5:10 பிப இல் ஓகஸ்ட் 27, 2011
its a very useful technology
8. winmani | 6:40 பிப இல் ஓகஸ்ட் 27, 2011
@ azae
மிக்க நன்றி
9. raaj | 11:06 பிப இல் ஓகஸ்ட் 28, 2011
really very very useful information…………….
10. winmani | 12:43 முப இல் ஓகஸ்ட் 29, 2011
@ raaj
மிக்க நன்றி
11. deva | 8:26 பிப இல் செப்ரெம்பர் 5, 2011
kaduku siruthaalum kaaram kuraiyaathu enpaarkal. athu pola sila thgavalakal matumea ullathu enraalum ellaamee payanullavai, narukku irukku. nadrikal pala
deva
12. arun | 1:26 முப இல் செப்ரெம்பர் 12, 2011
thank u so much…..
13. winmani | 8:37 முப இல் செப்ரெம்பர் 13, 2011
@ arun
மிக்க நன்றி