நம் எண்ணங்களுக்கு மல்டிமீடியா உதவியுடன் அனிமேசனாக உயிர் கொடுக்க உதவும் பயனுள்ள தளம்.
ஓகஸ்ட் 21, 2011 at 9:52 பிப 2 பின்னூட்டங்கள்
நமக்கு தோன்றும் எண்ணங்களை அனிமேசனாக கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு இணையதளம் வாயிலாக எந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி , எந்த ஒரு அனிமேசன் பயிற்சியும் இன்றி எளிதாக நாமே உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
புதுவிதமாக நமக்கு தோன்றும் விதவிதமான எண்ணங்களுக்கு வடிவம் கொடுத்து நம் ஐடியாவை மல்டிமீடியா உதவியுடன் ஆன்லைன் மூலம் அனிமேசன் படமாக உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.creazaeducation.com

படம் 2
இத்தளத்திற்கு சென்று Register என்பதை சொடுக்கி புதிதாக ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கி உள்நுழையலாம். ஐடியாக்களை Map ஆக உருவாக்குவதில் தொடங்கி கார்டூன் உருவாக்குவது, ஆடியோ எடிட் செய்வது மற்றும் வீடியோ எடிட் செய்வது என அத்தனையையும் நாம் ஆன்லைன் மூலம் செய்யலாம். எப்படி பயன்படுத்துவது என்பதை வீடியோவுடன் காட்டி அசத்துகின்றனர். வீடியோ அல்லது ஆடியோ எடிட் செய்வதில் எவ்வளவு புதுமையான டூல்கள் உள்ளது என்பதையும், அழகான கார்டூன் ஒரு திறமையான கார்டூன் வடிவமைப்பாளர் உருவாக்குவது போல் எப்படி உருவாக்கலாம் என்பதையும் அழகுடன் காட்டுகின்றனர். புதுமை விரும்பிகளுக்கும், பொழுது போக்கிறாக நேரத்தை வீணடிக்காமல் இது போன்ற பயனுள்ள சேவைகளை ஆன்லைன் மூலம் எங்கிருந்தும் கற்க விரும்புபவர்களுக்கும் இத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.
நம் முகத்துடன் அனிமேசனில் வாழ்த்து சொல்ல புதுமையான இணையதளம்.
கண்ணைக் கவரும் டெக்ஸ்ட் அனிமேசன் எளிதாக உருவாக்கலாம்.
ஆன்லைன்-ல் ஜீப் ( Gif ) அனிமேசன் எளிதாக உருவாக்கலாம்
குழந்தைகள் விரும்பும் கார்டூன் முதல் அத்தனை டி.வி நிகழ்சிகளும் ஒரே இடத்தில் பார்க்கலாம்.
வின்மணி சிந்தனை உண்மையான உலக சமாதானம் வேண்டும் நபர்கள் பூமித்தாயின் செல்லக் குழந்தைகள். அவர்களை போற்றுவது நம் கடமை.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.இந்தியாவில் சந்தன மரங்கள் அதிகமாக காணப்படும் மாநிலம் எது ? 2.டாக்டர் ஹர்கோவிந் குரானாவிற்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு எந்த ஆண்டு வழங்கப்பட்டது ? 3.இந்தியாவில் புகையிலை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது ? 4.அன்னைதெரசாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு எந்த ஆண்டு வழங்கப்பட்டது ? 5.இந்தியாவில் பீரங்கி படையை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் யார் ? 6.இந்தியாவில் குளிர்கால வெப்பநிலை எந்த மாதங்களில் நிலவுகிறது ? 7.மாநில மறுசீரமைப்புச்சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது? 8.இந்தியாவில் தற்போது எத்தனை உயர்நீதிமன்றங்கள் உள்ளன? 9.இந்தியாவில் பருவக்காற்று மூலம் எந்த மாதங்களில் மழை பொழிகிறது ? 10.ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் தலைநகர் எது ? பதில்கள்: 1.கர்நாடகா, 2. 1968, 3.ஆந்திரப்பிரதேசம் , 4.1979, 5.பாபர், 6.அக்டோபர் முதல் பிப்ரவரி வரை, 7.1956, 8.21, 9.ஜூன் முதல் நவம்பர் வரை, 10.ஐதராபாத்.
இன்று ஆகஸ்ட் 21
பெயர் : சுப்பிரமணியன் சந்திரசேகர், மறைந்த தேதி : ஆகஸ்ட் 21, 1995 இவர் ஒரு வானியல் இயற்பியலாளர் ஆவார். இந்தியாவில் லாகூரில் பிறந்தவர்.விண்மீன்கள் பற்றிய இவரது ஆய்விற்காக இவருக்கும் வில்லியம் ஃபௌலருக்கும் 1983 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: நம் எண்ணங்களுக்கு மல்டிமீடியா உதவியுடன் அனிமேசனாக உயிர் கொடுக்க உதவும் ப.
1.
salemdeva (@salemdeva) | 9:40 முப இல் ஓகஸ்ட் 26, 2011
பயனுள்ள பகிர்வு..!!
2.
winmani | 12:10 பிப இல் ஓகஸ்ட் 26, 2011
@ salemdeva
மிக்க நன்றி