மனிதருக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகள் பிராணிகள் பற்றி சொல்லும் அரிய தளம்.
மார்ச் 24, 2011 at 12:25 பிப 2 பின்னூட்டங்கள்
சாதாரன பூச்சி வகைகளில் இருந்து பிராணி வகைகள் வரை
அனைத்திலும் மனிதனுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பூச்சிகள்
என்னென்ன இதானால் மனிதனுக்கு என்ன நோய் எல்லாம்
ஏற்படுகிறது என்பதைப்பற்றிய தகவல்களை விரிவாக கொடுக்க
ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
கரையான், முசுக்குட்டை,வெட்டுக்கிளி,சிலந்தி,எறும்பு போன்ற
அனைத்து பூச்சி வகைகளிலும் நம் கண்னுக்கு தெரியாமல் என்ன
நோய் எல்லாம் ஏற்படுகிறது. ஒவ்வொரு பூச்சியையும் விரிவாக
ஆராய்ந்து அதனால் ஏற்படும் பாதிப்பு தகவல்களை நமக்கு
கொடுக்கிறது இந்ததளம்.
இணையதள முகவரி : http://www.nomorepests.co.uk
எந்த பூச்சி நம்மை கடித்தால் உடலில் என்னவெல்லாம் மாற்றம்
நிகழும் என்பதைப்பற்றிய தகவல்களும், சிலவகை விஷபூச்சிகள்
கடித்தால் நாம் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை
என்னென்ன என்பதையும் விரிவாக கொடுக்கிறது. பூச்சிகளின்
உலகத்தில் இருக்கும் அனைத்து வகையான பூச்சிகள் பற்றிய
தகவல்களையும் நாம் இந்த ஒரே தளத்தின் மூலம் தெரிந்து
கொள்ளலாம். ஆராய்ச்சி மாணவர்கள் முதல் அனைத்து தரப்பு
மக்களும் தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு பயனுள்ள தளமாகவே
இது இருக்கிறது. கண்டிப்பாக இந்தப்பதிவு அனைவருக்கும்
பயனுள்ளதாக இருக்கும்.
நம் உடல் வியாதிகளுக்கு தீர்வு சொல்ல இலவச மருத்துவர் இருக்கிறார்.
உங்கள் செல்லப்பிராணிகளுக்குகென்று பயனுள்ள தனி இணையதளம்
செல்லப்பிராணிகளுக்கான நிகழ்ச்சி நடக்கும் இடத்தை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
மருத்துவரிடம் இலவச ஆலோசனை பெற முத்தான மூன்று இணையதளங்கள்.
விண்வெளிக்கு நாசா அனுப்பும் பளு தூக்கும் ரோபோ மனிதன் சிறப்பு படங்களுடன்
வின்மணி சிந்தனை அன்பைத் தவிர வேறு எந்தப் பொருளாளும் திறமையான மனிதர்களை விலைக்கு வாங்க முடியாது.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.மதர்தெரஸா பாரத ரத்னா விருது பெற்ற ஆண்டு ? 2.டாக்டர் ராஜேந்திர பிரசாத் பாரத ரத்னா விருது பெற்ற ஆண்டு ? 3.சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரி பாரத ரத்னா விருது பெற்ற ஆண்டு ? 4.அப்துல்கலாம் பாரத ரத்னா விருது பெற்ற ஆண்டு ? 5.கோவிந்த வல்லபந்த் பாரத ரத்னா விருது பெற்ற ஆண்டு ? 6.சத்ய ஜித்ரே பாரத ரத்னா விருது பெற்ற ஆண்டு ? 7.டாக்டர் ஜாகிர் உசேன் பாரத ரத்னா விருது பெற்ற ஆண்டு ? 8.இந்திராகாந்தி பாரத ரத்னா விருது பெற்ற ஆண்டு ? 9.ஜெய்பிரகாஷ் நாராயணன் பாரதரத்னா விருது பெற்ற ஆண்டு? 10.வரஹகிரி வெங்கடகிரி பாரதரத்னா விருது பெற்ற ஆண்டு? பதில்கள்: 1.1980,2.1962,3.1954,4.1997,5.1957, 6.1992,7.1963, 8.1971, 9.1998,10.1975.
இன்று மார்ச் 24 பெயர் : முத்துசுவாமி தீட்சிதர் , பிறந்த தேதி : மார்ச் 24, 1776 சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர்,கர்நாடக சங்கீதத்தில் மட்டுமன்றி இந்துஸ்தானி சங்கீத்தத்திலும் தனக்கென்று தனிமுத்திரைப் பதித்தவர்.ஒரு பதவர்ணம், ஒரு தரு,ஐந்து இராகமாலிகைகளும் இயற்றியுள்ளார்.பதினாறு கணபதிகள் பெயரில் ஷோடஸ கணபதி கீர்த்தனைகள் இயற்றியுள்ளார். அவற்றில் "வாதாபி கணபதிம்" (ஹம்சத்வனி) "சிறீமகா கணபதி" (கௌளை) என்ற கிருதிகள் பிரசித்தமானவை. இசை உலகம் என்றும் உங்களை மறவாது.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: மனிதருக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகள் பிராணிகள் பற்றி சொல்லும் அரிய த.
1. farhath | 2:06 முப இல் மார்ச் 26, 2011
தகவலுக்கு நன்றி.
2. winmani | 11:19 பிப இல் மார்ச் 26, 2011
@ farhath
மிக்க நன்றி