Archive for ஜூன் 29, 2010

புகைப்படகாரர்களையும் அவர்களின் புத்தகங்களையும் கண்டுபிடிக்க எளிய வழி

அரியவகை புகைப்படங்கள் பலவற்றை பற்றியும் அதை
புகைப்படகாரர்கள் எடுத்த தொழில்நுட்ப டெக்னிக் பற்றியும்
அவர்களின் அனுபவங்களையும் பற்றியும் எளிதாக தெரிந்து
கொள்வது எப்படி என்பதைப்பற்றிதான் இந்த பதிவு.

அழகான புகைப்படங்கள் பற்றியும் அதைப்பற்றி உள்ள புத்தகங்கள்
பற்றியும் எளிதாக கண்டுபிடிக்க ஒரு இணையதளம் வந்துள்ளது
இந்த இணையதளத்திற்க்கு சென்று நமக்கு பிடித்த புகைப்படகாரர்களின்
பெயர் அல்லது அவர்களின் நாட்டின் பெயரைக்கொடுத்து தேடலாம்
நமக்கு உடனடியாக அவர்கள் எடுத்த புகைப்படம் மற்றும் அந்த
புகைப்படகாரர்கள் எழுதிய புத்தகம் தேடுதல் முடிவில் காட்டப்படும்
பல இணையதளங்கள் இதற்க்காக இருந்தாலும் தேடுதலில்
எளிமையாகவும் அதிக புகைப்படகாரர்களையும் கொண்டு இணைய
உலகில் மிகப்பெரிய மரமாக வளர்ந்து வருகிறது. கண்டிப்பாக
இந்த இணையதளம் புகைப்படகாரர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இணையதள முகவரி : http://snapm.com

வின்மணி சிந்தனை
தனக்கு கிடைக்கும் காலத்தை மக்கள் நலனுக்காக சரியாக
பயன்படுத்தாத அரசியல்வாதி பயனற்ற பிறவியாவான்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இயற்கையான புயல் உருவாகக் காரணம் என்ன ?
2.இந்தியாவில் அமாவாசையாக இருந்தால் அமெரிக்காவில்
 எவ்வாறு இருக்கும் ?
3.ஆண்,பெண் இருபாலரின் மூளையின் அளவில் வேறுபாடு
  உண்டா?
4.வைரம் ஜொலிப்பதற்க்கு முக்கிய காரணம் என்ன ?
5.ஒளி ஆண்டு ( Light Year ) என்பது என்ன ?
6.சிலபேருக்கு மட்டும் இடதுகை பழக்கம் இயற்கையாக
 ஏற்படக் காரணம் என்ன ?
7.இந்தியாவின் முதல் பெண் மேயர் யார் ?
8.யோகா என்னும் சமஸ்கிருதச் சொல்லுக்கு என்ன பொருள்?
9.சீனா முதன் முதலில் எப்போது ஒலிம்பிக் விளையாட்டில்
 கலந்து கொண்டது ?
10.இடி மின்னல் நாடு என்று எந்த நாட்டை குறிப்பிடுகின்றனர்?
பதில்கள்:
1.குளிர்ந்தகாற்றும் வெப்பகாற்றும் சந்திப்பதால்,2.பெளர்ணமியாக 
இருக்கும்,3.ஆண்களின் மூளை பெண்களின் மூளையை விட
பெரியது, 4.ஊடுறிவிச்செல்லும் ஒளி பிரதிபலிக்கவும் செய்யும்,
5.வெளிச்சக்கதிர்கள் 1ஆண்டு காலத்தில் பயணப்படும் வேகத்தை
குறிப்பது,6.மூளையில் வலது பக்கம் அதிக சக்தியை 
பெற்றிருப்பதால்,7.தாரா செரியன் 1957- சென்னை,8.ஒழுக்கம்,
9.1984-ல்,10.பூட்டான்.
இன்று ஜூன் 28 
பெயர் : பி. வி. நரசிம்ம ராவ் ,
பிறந்த தேதி : ஜூன் 28, 1921
இந்தியாவின் ஒன்பதாவது பிரதமராக 
பணியாற்றியவர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த
இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின்
உறுப்பினர். தென் இந்தியாவைச் சேர்ந்த முதல்
இந்தியப் பிரதமர் இவரே. இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான
ராவ், 1962 முதல் 1971 வரை மத்திய அமைச்சரவையில்
பங்கு வகித்ததுடன் 1971 முதல் 1973 வரை ஆந்திரப்பிரதேச 
மாநிலத்தின் முதல்வராகவும்பதவி வகித்தார். 

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

ஜூன் 29, 2010 at 7:21 பிப 4 பின்னூட்டங்கள்


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜூன் 2010
தி செ பு விய வெ ஞா
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...