நாம் செய்யும் பணிகளை எளிதாக புரியும் படி Virtual முறையில் அழகாகக் காட்டலாம்.
ஜூலை 6, 2011 at 12:45 பிப பின்னூட்டமொன்றை இடுக
ஆன்லைன் மூலம் வேலை செய்து கொண்டிருப்பவர்கள் முதல் ஆன்லைன் மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் வரை அனைவரும் தாங்கள் சொல்ல வரும் கருத்தை நொடியில் Virtual முறையில் அணைவரும் புரியும் படி பகிர்ந்து கொள்ளலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
Virtual வரைபலகை என்பதன் மூலம் நாம் செய்யும் பிராஜெக்ட் மற்றும் நாம் எடுத்து வைக்கும் கருத்துக்களை அழகாக ஆன்லைன் மூலம் எளிதில் தனித்தனி வகையாக காட்டலாம் , நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://scrumblr.ca
இத்தளத்திற்கு சென்று நாம் உருவாக்க போகும் Virtual Board -க்கான பெயரை கொடுத்து படம் 1-ல் காட்டியபடி கொடுத்து go என்ற பொத்தானை சொடுக்க வேண்டும். அடுத்து வரும் திரையில் இடது பக்கத்தின் அடியில் இருக்கும் + என்ற ஐகானை சொடுக்கினால் புதிதாக ஒரு தாள் ( Paper Box) உருவாகும். இதை Double click செய்து நாம் தட்டச்சு செய்ய வேண்டியதை தட்டச்சு செய்து வரை பலகையில் எங்கு வேண்டுமோ அங்கு நகர்த்தலாம், ஒவ்வொரு முறையும் + என்ற ஐகானை சொடுக்கி புதிதாக Paper box தேவையான எண்ணிக்கையில் உருவாக்கலாம். தேவை இல்லையென்றால் paper box மேல் மவுஸ் -ஐ கொண்டு சென்றதும் வரும் Close என்பதை சொடுக்கி நீக்கலாம். வலது பக்கம் இருக்கும் Virtual வரை பலகையில் ஓரத்தில் மவுஸ் -ஐ கொண்டு சென்றதும் வரும் + என்ற ஐகானை சொடுக்கி மெனு உருவாக்கலாம்.எல்லாம் உருவாக்கியதும் நாம் உருவாக்கிய முகவரியை நாம் யாரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டுமோ அவருக்கு அனுப்பலாம் அவரும் தேவையான மாற்றம் செய்து நமக்கு தெரியப்படுத்தலாம். Virtual வரைபலகையில் நம் பிராஜெக்ட் தெரிவது நன்றாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
ஒரே வரைபலகையில் பல நாடுகளில் உள்ள அனைவரும் நேரடியாக படம் வரையலாம்.
கணினியின் விசைப்பலகையை (Keyboard) சுத்தப்படுத்தும் சிறப்பு வீடியோ.
நாம் வரையும் படங்களை ஆன்லைன் மூலம் டிவிட்டரில் பகிர்ந்து கொள்ள.
டிவிட்டரில் உங்கள் புகைப்படம் மற்றும் வீடியோக்களை இலவசமாக பகிர்ந்துகொள்ள.
வின்மணி இன்றைய சிந்தனை காலத்தோடு செய்யும் வேலை நமக்கு தேவையான நேரத்தில் நல்ல பெயரை எடுத்துக் கொடுக்கும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.வ.வு.சி எங்கு பிறந்தார் ? 2.ஆற்காட்டை ஆட்சி செய்த நவாப்புகளின் ஆட்சி முடிவுற்ற ஆண்டு ? 3.இராஜாஜி திட்டம் வெளியிடப்பட்ட ஆண்டு ? 4.சோழர்களின் காலம் மிகவும் சிறப்பு பெற்றதற்கு காரணம் ? 5.’கருப்பு காந்தி’ என்று அழைக்கப்படுபவர் யார் ? 6.பசுமைப்புரட்சியுடன் தொடர்புடைய தமிழ விஞ்ஞானி யார் ? 7.கல்பாக்கம் அணுசக்தி நிலையம் உள்ள மாவட்டம் எது ? 8.சென்னையில் ஹோம்ரூல் இயக்கத்தை தொடங்கியவர் யார்? 9.வாஞ்சி நாதன் சுட்டுக்கொல்லப்பட்டது எப்படி ? 10.திருவிளையாடல் புராணத்தை தமிழில் எழுதியவர் யார் ? பதில்கள் 1.ஓட்டப்பிடாரம், 2.1801, 3.1944, 4.கிராம நிர்வாகம், 5.காமராஜர்,6.எம்.எல்.சுவாமிநாதன், 7.காஞ்சிபுரம், 8.அன்னிபெசன்ட்,9.தனக்குத் தானே,10.பரஞ்சோதி முனிவர்.
இன்று ஜூலை 6
பெயர் : பரிதிமாற் கலைஞர், பிறந்ததேதி : ஜூலை 6, 1870 ஒரு தமிழறிஞரும், நூலாசிரியரும், தனித்தமிழ் இயக்கத்தில் முதன்மையான பங்கு வகித்தவர்களில் ஒருவரும் ஆவார். இவர் உயரிய செந்தமிழ் நடையில் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவர். நாடகப் புலமை சான்றவர். 'தமிழ் மொழி வரலாறு' போன்ற ஆய்வு நூல்களையும், கலாவதி, ரூபாவதி போன்ற நாடக நூல்களையும், நாடக இலக்கணமான நாடகவியலையும் இயற்றிவர்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: நாம் செய்யும் பணிகளை எளிதாக புரியும் படி Virtual முறையில் அழகாகக் காட்டலாம்..
Subscribe to the comments via RSS Feed