Archive for மே 20, 2010
முதல் 4G போன் அறிமுகம் சிறப்பு படம் மற்றும் வீடியோக்களுடன் ஸ்பெஷல் ரிப்போர்ட்
நாம் தற்போது பயன்படுத்திக்கொண்டிருக்கும் 3G சேவையைக்
காட்டிலும் 10 மடங்கு அதிக வேகத்தில் இன்னும் ஒரு படி
தாண்டி 4G சேவை நமக்கு கிடைக்க இருக்கிறது இதைப்பற்றிய
ஒரு சிறப்பு பதிவு.
3G -ன் சேவை நாம் தற்போது பயன்படுத்திக்கொண்டிருக்கும்
மொபைலில் முகம்பார்த்து பேச மட்டுமல்ல தகவல் பறிமாற்றத்திலும்
ஒரு முன்னனி இடத்தைப் பிடித்து இருக்கிறது.இந்நிலையில் தற்போது
இதன் அடுத்த தலைமுறைக்கான புரட்சியாக 4G சேவை
வெளிவந்துள்ளது. 3G சேவையை விட 10 மடங்கு வேகம் அதிகம்.
அமெரிக்காவில் HTC EVO என்ற நிறுவனம் சிறப்பு ஹார்டுவேர்
மற்றும் ஆண்டிராய்டு அப்ளிகேசன் ”சூப்பர் போன்ஸ் “ என்ற பெயரில்
4G சேவையை வரும் ஜுன் 4ம் தேதி முதல் வெளீயிடுகி. HTC
பயனாளர்கள் 3G -ல் கொடுத்த அனுபவத்தை கொண்டு தான் 4G -ன்
சேவை வர இருக்கிறது. மாதக் கட்டணமாக $29 டாலர் பணம் மட்டும்
கூடுதலாக செலுத்தினால் போதுமானது. விரைவில் அனைத்து
நாடுக்ளிலும் இதன் சேவை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
HTC EVO 4G – பற்றிட சிறப்பு படம் மற்றும் வீடியோக்களை
இத்துடன் இணைத்துள்ளோம்.
வின்மணி சிந்தனை இயற்கையில் கிடைக்கும் பழங்களை ஒருவேளை சாப்பிட்டால் கூட நமக்கு கோபம் வருவது பெருமளவு நின்று விடும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.ஜான்சி ராணியின் பெயர் என்ன ? 2.தமிழ் நாடக உலகின் தந்தை என போற்றப்படுபவர் யார் ? 3.ஒளிசுழற்ச்சி மாற்றியம் எது ? 4.இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் நடுவர் யார் ? 5.உழவனின் நண்பன் என்று அழைக்கப்படுவது எது ? 6.மலரின் எந்தப்பகுதி விதையாகிறது ? 7.பிறந்தது முதல் இறப்பது வரை தூங்காத பிராணி எது ? 8.மிகச்சிறிய இதயம் கொண்ட பிராணி எது ? 9.ராமகுண்டம் அணுமின் நிலையம் எந்த மாநிலத்தில் உள்ளது ? 10.ஹரித்துவார் எந்த நதிக்கரையில் உள்ளது ? பதில்கள்: 1.லட்சுமிபாய்,2.சங்கரதாஸ் சுவாமிகள், 3.மெண்டலிக் அமிலம், 4.அஞ்சலி,5.மண்புழு,6.சூல், 7.எறும்பு,8. சிங்கம் 9.ஆந்திரா,10.கங்கை
இன்று மே 19 பெயர் : ஜாம்செட்ஜி டாட்டா, பிறந்த தேதி : மே 19, 1904 இந்தியாவின் நவீன தொழில்துறையின் முன்னோடிகளுள் ஒருவராவார். இவர் இந்திய தொழில்துறையின் தந்தை என்று அறியப்படுகிறார். இவர் பாரிஸ் நகரத்திலேயே நீண்ட காலம் வசித்தார். இவர் இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள நவசாரி என்னுமிடத்தில் பிறந்தார். எஃகு உற்பத்திக்குப் பெயர்பெற்ற ஜாம்ஷெட்பூர் நகரத்திற்கு இவருடைய நினைவாகவே பெயர்சூட்டப்பட்டது.