Archive for மே 30, 2010
உங்கள் பழைய மொபைல்-ஐ நல்ல விலைக்கு விற்கலாம்
நாம் பயன்படுத்தும் மொபைல் பழையதாகி விட்டது இனி
அந்த மொபைல் போனை எங்கு யாரிடம் விறகாலம் என்றெல்லாம்
தேட வேண்டாம் எளிதாக உங்கள் போனை நல்ல விலைக்கு
விற்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
நாளுக்கு நாள் புதிது புதிதாக மொபைல் போன் வந்த வண்ணம்
தான் உள்ளது. கடந்த மாதம் நாம் வாங்கிய மொபைல்-ஐ விட
இந்த மாதம் அதை விட கூடுதல் சலுகைகளுடன் விலைக்குறைவாக
பல மொபைல் போன் வந்தது கொண்டே இருக்கிறது. நம் பழைய
மொபைல் விற்க வேண்டும் என்றால் எங்கே சென்று விற்ப்பது
என்றெல்லாம் தேட வேண்டாம் இந்த இணையதளத்தின் மூலம்
நம் மொபைல் போனை நல்ல விலைக்கு விற்கலாம்.
இணையதள முகவரி : http://www.sellmymobile.com
மொபைல் போன் முதல் ஐபாட் வரை அனைத்தையும் நாம்
இங்கு விற்கலாம். 20 மொபைல் ரிசைக்கிள் செய்யும் நிறுவனங்கள்
நேரடியாக நம் மொபைல் போனை வாங்கிக்க்கொள்ளும். நமக்கு
வேறுயாராவது மொபைல் போன் குறைந்த விலையில் கிடைத்தால்
வாங்கிக்கொள்ளலாம். அனைத்து நிறுவன மொபைல்களுகும் இந்த
சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. நாம் விரும்பிய விலையில்
விற்க மட்டுமல்ல வாங்கியும் கொள்ளலாம்.
வின்மணி சிந்தனை இறைவன் கருனையால் சில நேரங்களில் சில மனிதர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும் அப்போது அதை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.உலக நாடக தினம் எப்போது கொண்டாடப்படுகிறது ? 2.எந்த நோய் பாக்டீரியாவால் பரவுவதில்லை ? 3.ஜூபிடர், பூமி இதில் எது பெரியதாக இருக்கும் ? 4.ரயில்வே சிக்னலை கண்டுபிடித்தவர் யார் ? 5.ராஜ நாகத்தின் ஆயுட்காலம் எவ்வளவு ? 6.இயற்கையான வெந்நீர் ஊற்றுக்கு என்ன பெயர் ? 7.காஷ்மீர் மாநிலத்தின் மாநில மிருகம் எது ? 8.13 மொழிகளில் எழுதவும் பேசவும் தெரிந்த இந்திய பிரதமர் யார் ? 9.இந்தியா சுதந்திரம் அடைந்த போது எத்தனை மன்னர்கள் இருந்தனர் ? 10.செவ்வாய் கிரகத்தில் இறங்கிய முதல் விண்கலம் எது ? பதில்கள்: 1.மார்ச் 27, 2.பெரியம்மை, 3.ஜூபிடர், 4. ஹால்,5.14 ஆண்டுகள், 6.கெய்சர்,7.கஸ்தூரிமான், 8. பி.வி.நரசிம்மராவ்,9.552 ,10. மார்ஸ் 3
இன்று மே 30 பெயர் : போரிஸ் பாஸ்ரர்நாக் , மறைந்த தேதி : மே 30, 1960 ரஷ்யக் கவிஞரும், புதின எழுத்தாளருமாவார். 1958 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசைத் தனது டாக்டர் ஷிவாகோ புதினத்துக்காகப் பெற்றவர்.இப்புதினத்தின் மூலம் அவர் மன்னர் காலத்து உயர் வகுப்பினரதும் ஏனைய வகுப்பைச் சார்ந்தவர்களிடமும் நடைமுறை உண்மையை எடுத்துக் காட்டியிருந்தார்.PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்