பிரிட்டன் செயிண்ட் டிஜிட்டல் நிறுவனம் நடத்தும் மாறுபட்ட பொழுதுபோக்கு போட்டி
செப்ரெம்பர் 10, 2011 at 4:48 பிப 1 மறுமொழி
ஒரு திறமையான கலைஞரை வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதற்காக பிரிட்டனின் செயிண்ட் நிறுவனம் மாறுபட்ட கலை , ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு போட்டிகளை அறிமுகப்படுத்தியுள்ளது யார் வேண்டுமானாலும் இதில் ஆன்லைன் மூலம் பங்கேற்கலாம் வெற்றி பெறுபவர்களுக்கு பணமும் பரிசும் கொடுக்க இருக்கின்றனர் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
கார்டூன் வரைகிறேன் என்று சொல்லி யாருக்கும் புடிக்காத அல்லது விளங்க முடியாத வரைபடம் ஏதும் வரையும் திறமை உங்களுக்கு அல்லது உங்கள் குழந்தைகளுக்கு இருக்கிறதா உங்களைத் தான் வ்லைவீசி தேடுகின்றனர் ஒரு தளத்தில்.
இணையதள முகவரி : http://www.canyoudrawtheinternet.com
இத்தளத்திற்கு சென்று Upload என்ற பொத்தனை சொடுக்கி படம்1-ல் காட்டியபடி உங்கள் பெயர் அலைபேசி எண் மற்றும் இதர விபரங்களை கொடுத்து File என்று கொடுத்திருப்பதற்கு பக்கத்தில் இருக்கும் Browse என்ற பொத்தனை சொடுக்கி நம்மிடம் நாம் வரைந்த படத்தை அனுப்பலாம், நாம் வரைந்த படத்தின் கொள்ளவு 3MB க்கும் குறைவாக இருக்க வேண்டும். Jpg / Gif / Png போன்ற ஏதாவது ஒரு பார்மெட்டில் தான் இருக்க வேண்டும். நமக்கு பிடிக்காத ( புரியாத) படங்கள் தான் சில நேரங்களில் பரிசு பெறுகிறது, பரிசை விட நாம் அனுப்பும் படங்களை காட்சிகளாக்கி அதில் இருக்கும் கிடைக்கும் வருமானத்தை பள்ளிகளுக்கு உதவி செய்ய இருக்கிறது.எத்தனை மக்கள் நம் படத்திற்கு ஓட்டளிக்கின்றனர் என்பதை வைத்து வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்படுகின்றனர்.
பள்ளிக்குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவரின் அறிவு பசி போக்கும் இடம்.
பள்ளி,கல்லூரிகளில் எடுக்கும் குறிப்பை (Notes) புதுமையாக சேமித்து வைக்கலாம்.
பெற்றோர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் யாகூவின் பயனுள்ள பாதுகாப்பு தேடல் உதவி.
வங்கி கணக்கு முதல் அனைத்துவிதமான கணக்கிற்கும் நமக்கு உதவி செய்ய ஆன்லைன் கணக்கு பிள்ளை.
வின்மணி சிந்தனை காலையில் எழுந்ததும் இறைவனுக்கு ஒரு முறை நன்றி கூறி அன்றைய செயல்களை செய்தால் வெற்றி கண்டிப்பாக கிடைக்கும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.இந்தியாவில் தற்போது சர்வதேச விமான நிலையங்கள் எத்தனை உள்ளன ? 2.இந்திய மாநிலங்கள் எதன் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன? 3.இந்தியாவில் மிகப்பழமையான நீள சாலைப்பாதை தடம் எது ? 4.இந்தியாவின் 25-வது மாநிலமாக உருவாக்கப்பட்ட மாநிலம் ? 5.இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் எங்குள்ளது ? 6.இந்தியாவின் முதல் உச்சநீதிமன்ற பெண் நீதிபதி யார் ? 7.நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம் எங்குள்ளது ? 8.ராஜீவ்காந்தி சர்வதேச விமான நிலையம் எங்குள்ளது ? 9.இந்தியாவின் ரூர் என அழைக்கப்படும் நதிப்பள்ளத்தாக்கு ? 10.சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் எங்குள்ளது ? பதில்கள்: 1.16, 2.மொழி, 3.கிரண்ட் ட்ரங் தடம், 4.கோவா, 5.டெல்லி,6.லைலாசேத், 7.கொல்கத்தா, 8.ஐதராபாத், 9.தாமோதர் நதிப்பள்ளத்தாக்கு, 10.மும்பை.
இன்று செப்டம்பர் 10
பெயர் : ஏ. கே. செட்டியார், மறைந்த தேதி : செப்டம்பர் 10, 1983 முதன் முதலில் மகாத்மா காந்தி பற்றி வரலாற்று ஆவணப் படம் எடுத்தவர்.சுமார் மூன்று ஆண்டு காலமாக மகாத்மாகாந்திப் பற்றி சேகரிக்கப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து 12,000அடி நீளமான மகாத்மா காந்தி படத்தை ஹிந்தியில் தயாரித்தார். இப்படம் 1948 இல் சுதந்திர தினத்தன்று புது டில்லியில் திரையிடப்பட்டது.இத்திரைப்படத்தின் பிரதிகள் (படிகள்) எதுவுமே இப்போது இல்லை.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்.
1. nancy | 3:27 பிப இல் நவம்பர் 9, 2011
Each & every newly introducing money earning web sites makes
the young and energetic (like 6 to 60 ) awesome one, in this regard
we can give additional newly title of your web site http://WWW.MONEY-WIN.WORDPRESS.COM, instead of winmani.wordpress.com.