செய்திகள் மற்றும் கட்டுரைகளை இலவசமாக எழுதிப்பழக இடம் கொடுக்கும் தளம்.
செப்ரெம்பர் 6, 2011 at 8:56 பிப பின்னூட்டமொன்றை இடுக
ஆங்கிலத்தில் நாம் கட்டுரை எழுத வேண்டும் , அந்த கட்டுரை முக்கிய ஆங்கில நாளிதழ் அல்லது பத்திரிகையில் வரவேண்டும் என்ற ஆசை உள்ள அனைவருக்கும், நீங்கள் எப்படி வேண்டுமானாலும் கட்டுரை, செய்திகள் மற்றும் உங்கள் எண்ணங்கள் என அனைத்தையும் இலவசமாக வெளியீட ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
பேனா வாங்கி எழுதும் முன்பு முதலில் ஐந்தாறு பேப்பரிலாவது கிறுக்கி பார்த்து நன்றாக எழுதுகிறதா என்று சோதித்த பின்பு தான் நாம் எழுத ஆரம்பிப்போம் இதே டெக்னிக் தான் புதிதாக நாம் ஒரு வலைப்பூ ஒன்று தொடங்கி ஏதாவது ஏழுதுவதற்கு முன்பு உங்கள் எழுத்துக்களை , செய்திகளை , கட்டுரைகளை வெளியீட்டுப்பார்க்க ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி :http://scriffon.com
புதிதாக இத்தளத்திற்குள் படம் 1-ல் காட்டியபடி Start Writting என்ற பொத்தானை சொடுக்கி வரும் திரையில் நம் இமெயில் முகவரியும் ஏதாவது ஒரு பாஸ்வேர்டும் ( இமெயில் பாஸ்வேர் கொடுக்க வேண்டாம்) கொடுத்து நுழைபவர்கள் அடுத்து வரும் திரையில் ஏற்கனவே இந்த இமெயில் முகவரியில் கணக்கு ஏதும் இல்லை அதனால் புதிதாக கணக்கு உருவாக்க உங்கள் கடவுச்சொல்லை கொடுத்து உள்நுழையுங்கள் என்று சொல்லும் அதில் ஏதாவது ஒரு கடவுச்சொல்லை கொடுத்து Create My New Account என்ற பொத்தானை சொடுக்கி உள்நுழையலாம்.அடுத்து வரும் திரையில் உங்கள் செல்லப்பெயர் அல்லது புனைப்பெயர் கொடுத்து Continue என்ற பொத்தானை சொடுக்கலாம். New Writting என்பதை சொடுக்கி கட்டுரை அல்லது செய்திகளை எழுதலாம். எழுதிப்பழக ஒரு மேடை கிடைத்தாசு நன்றாக எழுதிப்பழகிய பின் பிரபலபத்திரிகை அல்லது நமக்கென்று ஒரு வலைப்பூ உருவாக்கி நம் எண்ணத்தை வெளி உலகிற்கு காட்டலாம்.புதுமை விரும்பிகளுக்கும் பத்திரிகையாளராக செல்ல வேண்டும் என்ற ஆசை உள்ள அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
விளையாட்டு செய்திகளை உங்கள் பிளாக்-ல் தெரிய வைப்பது எப்படி
டிவிட்டர் செய்திகளை பேச வைத்து காதால் கேட்கலாம்.
ஹோலோ கிராபிக் செய்தி தொழில்நுட்பத்தின் வளர்ச்சி சிறப்பு வீடியோ
உலகச்செய்திகளின் வீடியோவை ஒரே இடத்தில் இருந்து பார்க்கலாம்.
வின்மணி சிந்தனை தோல்வி என்ற ஒன்று தான் மனிதனுக்கு முயற்சி என்ற ஒன்றைக் கொடுத்து முழு மனிதனாக்குகிறது.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.இந்திய தேசியப்பாடலை எழுதியவர் யார் ? 2.தேசிய கீதம் முதன் முதலில் எந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்டது ? 3.சாரநாத் அசோகசின்னம் தேசிய சின்னமாக எப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது ? 4.இந்தியாவின் தேசிய விலங்கு எது ? 5.தேசிய கீதத்தை எத்தனை வினாடிகளில் பாடி முடிக்க வேண்டும் ? 6.இந்தியாவின் தேசியப்பறவை எது ? 7.இந்தியாவில் பெண்களின் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது என்ன ? 8.இந்தியாவின் தேசிய மரம் எது ? 9.தேசியப்பாடலை ஆங்கில மொழியில் மொழிபெயர்த்தவர் யார் ? 10.இந்தியாவின் தேசிய மலர் எது ? பதில்கள்: 1.பக்கிம் சந்திர சாட்டர்ஜீ, 2.கல்கத்தா தேசிய மாநாடு, 3.ஜனவரி 26 ,1950, 4. வங்காளப் புலி,5.52 வினாடிகள், 6.மயில்,7.18, 8.ஆலமரம்,9.ஸ்ரீ அரபிந்தோ,10.தாமரை.
இன்று செப்டம்பர் 6
பெயர் : தினமலர் நாளிதழ் , தொடங்கிய நாள் : செப்டம்பர் 6 ,1951 தினமலர் இந்தியாவின் தமிழகத்திலிருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ்களில் ஒன்றாகும். இந்நாளிதழ் டி.வி.இராமசுப்பையர் என்பவரால் 1951 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் நாள் தொடங்கப்பட்டது.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: செய்திகள் மற்றும் கட்டுரைகளை இலவசமாக எழுதிப்பழக இடம் கொடுக்கும் தளம்..
Subscribe to the comments via RSS Feed