வாரம் லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய வாசகர்கள் பயன்படுத்தும் Angry Birds விளையாட்டை இனி குரோம் உலாவியில் விளையாடலாம்.
மே 20, 2011 at 1:02 முப பின்னூட்டமொன்றை இடுக
ஐபோன் முதல் ஆண்டிராய்டு வரை உலக அளவில் விளையாட்டு உலகில் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கும் Angry Birds விளையாட்டை இனி குரோம் உலாவியில் விளையாடலாம். இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
வெளிவந்த சில நாட்களில் அனைவரிடமும் இடம் பிடித்த இந்த கோபமான பறவைகள் தான் இந்த விளையாட்டு ஹீரோக்கள். எளிமையான விதிமுறை பயன்படுத்த எளிமை ஒன்றல்ல இரண்டல்ல முடிவுவே இல்லாமல், போரடிக்காமல் ஒரு விளையாட்டை உருவாக்கி அனைவரிடமும் இடம் பிடித்திருக்கும் இந்த Angry Birds விளையாட்டை ஐபோனில் தான் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்றாலும் தற்போது இனி இந்த விளையாட்டை நாம் குரோம் உலாவியிலே விளையாடலாம் நமக்கு உதவுதற்காக கூகிள் குரோம் வெப் ஸ்டோர் இந்த விளையாட்டை அதிகாரப்பூர்வமாக இலவமாகவே கொடுக்கிறது.
இணையதள முகவரி : https://chrome.google.com/webstore/detail/aknpkdffaafgjchaibgeefbgmgeghloj?hl=en#
இந்த முகவரியை கூகிள் குரோம் உலாவியில் கொடுத்து வரும் பக்கத்தில் படம் 1-ல் காட்டியபடி இருக்கும் Install என்பதை சொடுக்கி இந்த விளையாட்டை நம் குரோம் உலாவியில் நிறுவலாம். Angry Birds வெற்றியின் ரகசியம் என்னவென்றால் இந்த விளையாட்டின் ஒவ்வொரு நிலையும் நமக்கு புதுமையாகவும் விளையாட தூண்டும் வண்ணமும் இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரிய நிறுவனங்களின் CEO வரை அனைவருக் விளையாடும் ஒரு சிறந்த பொழுதுபோக்கு விளையாட்டாகவே இது இருக்கிறது. ஒரு வாரத்திற்கு லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய பயனாளர்கள் குரோம் உலாவியின் மூலம் பயன்படுத்தும் ஒரு விளையாட்டாகவே இது
இருக்கிறது. Angry Birds ரசிகர்களுக்கு இந்தப்பதிவு மகிழ்ச்சியான பதிவாக இருக்கும்.
உலாவியில் விளையாடும் புத்தம் புதிய HTML 5 விளையாட்டுக்கள்.
இசையின் அடிப்படையை விளையாட்டு மூலம் பயிற்சி கொடுக்கும் அபூர்வ தளம்.
திறமையான ‘சுடோ’ சுடுக்கு பேப்பரில் பிரிண்ட் செய்து விளையாடலாம்
ஆங்கில சொல்வளத்தை அதிகரிக்கும் ஆன்லைன் விளையாட்டு.
வின்மணி சிந்தனை மனதிற்கு அமைதி அளிக்கக்கூடிய எந்த இடமும் கோவில் தான். அமைதியான மனதில் அன்பு பெருகும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.இந்தியாவின் தேசிய மலர் எது ? 2.உச்சநீதி மன்ற நீதிபதிகளின் பதவி ஒய்வு பெறும் வயது ? 3.”சக்தி” க்கு மாற்றாக விளங்கும் மிகப்பெரியசக்தி ஆதாரம் எது? 4.இந்திய நேரம் கீரின் வீச் நேரத்தை விட எத்த்தனை மணி நேரம் அதிகம் ? 5.மாநில ஆளுநர் யாரால் நியமிக்கப்படுகிறார் ? 6.இந்தியாவின் தேசிய மிருகம் எது ? 7.இந்திய அரசியல் சட்டத்தில் அடிப்படை கடமைகள் குறித்த திருத்தம் எது ? 8.உலகிலே தேயிலை அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடு எது? 9.12 வது ஆசிய விளையாட்டுப்போட்டியில் அதிகத் தங்கம் வென்ற நாடு எது ? 10.இந்தியாவில் தோன்றிய மருத்துவ முறை எது ? பதில்கள்: 1.தாமரை,2.65,3.சூரியசக்தி,4.5.30 நிமிடம்,5.குடியரசுத்தலைவர், 6.புலி,7.42 வது திருத்தச்சட்டம்,8.இந்தியா,9.சீனா,10.ஆயுர்வேதம்.
இன்று மே 20
பெயர் : எடுவர்டு பூக்னர், பிறந்த தேதி : மே 20, 1860 ஜெர்மனியைச் சேர்ந்த வேதியியல் அறிஞரும் நொதியியல் (zymologist) அறிஞரும் ஆவார். இவர் நுண்ணுயிரி செல்கள் இல்லாமலே நொதிக்கச்செய்யும் முறையக் கண்டதற்காக, 1907 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: வாரம் லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய வாசகர்கள் பயன்படுத்தும் Angry Birds விளையா.
Subscribe to the comments via RSS Feed