ஆன்லைன் மூலம் கோப்புகளை இணையத்தில் பாதுகாப்பாக சேமிக்க வழி.
ஏப்ரல் 6, 2011 at 8:34 பிப பின்னூட்டமொன்றை இடுக
முக்கியமான கோப்புகளை பாதுகாப்பாக வைத்திருக்க இமெயில்
சேமித்து வைத்திருப்போம் ஆனால் Size அதிகமான கோப்புகளை
ஆன்லைன் மூலம் எளிதாக பாதுகாப்பாக சேமித்து வைத்து உலகின்
எங்கிருந்து வேண்டுமானாலும் தரவிரக்கலாம் நமக்கு உதவுவதற்காக
ஒரு தளம் உள்ளது.

படம் 1
முக்கியமான கோப்புகளை எந்த தளத்தில் சேமித்தால் பாதுகாப்பாக
இருக்கும் என்று எண்ணும் அனைவருக்கும் உதவுவதற்காக ஒரு
தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.cloudsafe.com
இத்தளத்திற்கு சென்று ஒரு இலவச பயனாளர் கணக்கு உருவாக்கிக்
கொண்டு நம் கணினியில் இருக்கும் அனைத்து வகையான
கோப்புகளையும் பதிவேற்றி சேமித்து வைக்கலாம். 1GB வரை
இலவசமாக இடம் தருகிறது. மிகவும் பாதுகாப்பான தளம் என்ற
சான்றிதழையும் பெற்றுள்ளது. கோப்புகளை ஆன்லைன் மூலம்
பாதுகாப்பாக சேமிக்க விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு
பயனுள்ளதாக இருக்கும்.
docx, pptx, xlsx, odp போன்ற கோப்புகளை ஆன்லைன் மூலம் பார்க்கலாம்.
கோப்பு உருவாக்கிய தேதி, பயன்படுத்திய நேரம் போன்றவற்றை எளிதாக மாற்றலாம்.
நம் கணினியின் கோப்புகளை எங்கிருந்து வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
ஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library
வின்மணி சிந்தனை சுயக்கட்டுப்பாடு மட்டும் தான் ஒரு மனிதனுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பாக இருக்க முடியும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.ஏலச் செடிகள் எத்தனை ஆண்டு பலன் தரும் ? 2.எந்த மரத்தின் இலைகளை கால்நடைகள் உண்பதில்லை ? 3.பழமையான உணவுப்பயிர் என்ன ? 4.சப்போட்டா மரப்பால் எதன் தயாரிப்பில் பயன்படுகிறது ? 5.சமணர்கள் எந்த மரத்தை சிறப்பாக கருதுகின்றனர் ? 6.தேக்கு மரம் இந்தியாவில் எந்த ஆண்டு பயிரிடப்பட்டது ? 7.பத்து பவுண்ட் கரும்பில் இருந்து எத்தனை பவுண்ட் சர்க்கரை எடுக்கலாம் ? 8.மல்லிகையை குறிக்கும் ஜாஸ்மின் என்ற சொல் எந்த மொழியில் உள்ளது ? 9.சீனர்கள் எழைகளின் கற்பூரம் என்று எதனை அழைக்கின்றனர்? 10.பெளத்தர்களின் புனித மரம் எது ? பதில்கள்: 1.40 ஆண்டுகள், 2.சீதாமரம், 3.கோதுமை, 4.ஆயிங்கம், 5.அசோக மரம்,6.1844, 7.1 பவுண்ட், 8.லத்தீன், 9.பூண்டு, 10.நாவல் மரம்.
இன்று ஏப்ரல் 6பெயர் : மீனாட்சிசுந்தரம் பிள்ளை , பிறந்த தேதி : ஏப்ரல் 6, 1815 சிறந்த தமிழறிஞர். உ. வே. சாமிநாதையரின் ஆசிரியர். அந்தாதி என்று சொல்லும் போதெல்லாம் உங்கள் ஞாபகம் தான் வருகிறது. இவர் 65 மேற்பட்ட தமிழ் நூல்களை எழுதியுள்ளார். உ.வே.சா -வை தமிழுக்காகத் தந்த உங்களுக்கு என்றும் எங்கள் நன்றிகள்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: ஆன்லைன் மூலம் கோப்புகளை இணையத்தில் பாதுகாப்பாக சேமிக்க வழி..
Subscribe to the comments via RSS Feed