Archive for செப்ரெம்பர் 6, 2010

கதை எழுத நினைப்பவர்களுக்கும் கதாசிரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்

கதை எழுத வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் கதாசிரியர்களுக்கும்
ஒரு வரப்பிரசாதமாக இனி ஆன்லைன் -ல் கதை எழுதலாம். பல்வேறு
விதமான படங்களையும் சேர்த்து அழகிய புத்தகம் உருவாக்கலாம்
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

கதை எழுதவேண்டும் என்ற ஆசை நெடுங்காலமாக இருக்கிறது ஆனால்
அதற்கு நேரம் இல்லை கூடவே கதைக்கு தகுந்த மாதிரி நாம் நினைத்த
படங்கள் கிடைக்கவில்லை என்று நினைக்கும் அனைவருக்கும் எளிதாக
ஆன்லைன் மூலம் கதை எழுதலாம். எழுதிய கதையில் விரும்பிய
படங்களை சேர்த்துக்கொள்ளலாம். எழுதிய கதையை ஆன்லைன் மூலம்
நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பலாம். நமக்கு உதவுவதற்காக
ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://storybird.com

இந்தத் தளத்திற்கு சென்று நாம் ஒரு இலவச புதிய கணக்கை உருவாக்கி
கொண்டு கதை எழுத தொடங்க வேண்டியது தான்,.விரும்பிய படங்களை
நாம் விரும்பும் பக்கத்தில் சேர்த்துக்கொள்ளலாம். நேரம் கிடைக்கும்
போது நம் கணக்கை திறந்து கொண்டு ஒவ்வொரு பக்கமாக கதையை
எழுதி கொண்டே போகலாம்.இங்கு இருக்கும் படங்களை பார்க்கும்
போது எல்லோருக்கும் கதை எழுதவேண்டும் என்ற ஆசை வரும்.
நேரம் கிடைக்கும் போது பயன்படுத்திப்பாருங்கள். இலட்சதிற்கும்
மேற்பட்ட கதைகள் இந்தத் தளத்தில் கொட்டிக்கிடக்கின்றன.சிங்கப்பூரில்
இருந்து தோழி வாசகி அவர்கள் தான் ஆன்லைன் மூலம் கதை எழுத
இணையதளம் இருந்தால் கூறுங்கள் என்று கேட்டிருந்தார்
அவர்களுக்காகவும் நம் அனைவருக்காகவும் கதை எழுத ஒரு அழகான
பயனுள்ள தளம்.

வின்மணி சிந்தனை
நல்ல எண்ணம், அடுத்தவர்களுக்கு தீங்கு நினைக்காத மனம்
கொண்ட எல்லா மக்களும் உயர்ந்த குடியில் பிறந்தவர்கள் தான்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இத்தாலியின் கொடியை வடிவமைத்தவர் யார் ?
2.உலகில் முதல் அணுசோதனை நடத்திய நாடு எது ?
3.குதுப்மினாரின் உயரம் எவ்வளவு ?
4.உலகின் இரண்டாவது பெரிய நாடு எது ?
5.உலக அமைதிக்கான நோபல் பரிசை நிர்ணயம் செய்வது ?
6.நெருப்புக்கோழிகள் அதிகமாக உள்ள நாடு எது ?   
7.ஈபில் கோபுரத்தின் உயரம் எவ்வளவு ?
8.மிக உயரமான சாலைபாலம் எது ?
9.கேரள மாநிலம் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது ?
10.முதலில் உலகப்படத்தை வரைந்தவர் யார் ?  
பதில்கள்:
1.நெப்போலியன், 2.அமெரிக்கா, 3.240 அடிகள்,4.கனடா,
5.நார்வே பாராளுமன்றம், 6.ஆப்பிரிக்கா, 7.984 அடிகள்,
8.பெய்லி பாலம்,9.1956-ல்,10.இராடோஸ்தானிஸ்.
இன்று செப்டம்பர் 6  
பெயர் : தினமலர் நாளிதழ்
தொடங்கிய நாள் : செப்டம்பர் 6 ,1951
தினமலர் இந்தியாவின் தமிழகத்திலிருந்து
வெளிவரும் தமிழ் நாளிதழ்களில் ஒன்றாகும்.
இந்நாளிதழ் டி.வி.இராமசுப்பையர் என்பவரால்
1951 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் நாள்
தொடங்கப்பட்டது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

செப்ரெம்பர் 6, 2010 at 1:40 முப 13 பின்னூட்டங்கள்


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,724 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

செப்ரெம்பர் 2010
தி செ பு விய வெ ஞா
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: