ஆன்லைன் மூலம் நாம் வரைந்த ஒவியத்தை விற்று பணம் சம்பாதிக்கலாம்
மே 27, 2010 at 9:42 பிப 4 பின்னூட்டங்கள்
ஒவியர்கள் தங்கள் படைப்ப உலகறியச் செய்யவும் , வரைந்த
அல்லது செதுக்கியிய அழகான ஒவியத்தை எப்படி ஆன்லைன்
மூலம் விற்கலாம் என்பதைப்பற்றிய சிறப்பு பதிவு.

படம் 1

படம் 2
காலத்தால் அழியாத ஒவியம் பலவற்றை இப்போது மக்கள்
உருவாக்கி வருகின்றனர். ஆனால் இப்படி வரையும் ஒவியத்தை
உலகறியச்செய்வது எப்படி மற்றும் இந்த ஒவியங்களை விற்பனை
செய்வது எப்படி என்ற கேள்வியும் கூடவே இருந்து வருகிறது
உங்களுக்கு உங்கள் ஒவியத்திறமைகளை வெளி உலகத்திற்க்கு
கொண்டு செல்லவும் இதன் மூலம் பணம் சம்பாதிக்க
உதவுவதற்காகவும் ஒரு இணையதளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.artflock.com
இந்த இணையதளத்திற்க்கு சென்று நமக்கு என்று ஒரு இலவச
கணக்கு உருவாக்கிக்கொள்ளவும். அதன் பின் நம்மிடம் இருக்கும்
ஒவியத்தை புகைப்படம் எடுத்து அதன் அளவு , ஒவியத்தின்
பொருள் மற்றும் பல விபரங்களை கொடுத்து இலவசமாக
பதிவேற்றலாம் நம் ஒவியம் பல பேருக்கு சென்றடைவதுடன்
சில பேர் புகைப்படத்துடன் அதன் விலையையும் நிர்ணயம்
செய்து வைக்கலாம் பிடித்தவர்கள் உடனடியாக ஆன்லைன்
மூலம் நம் புகைப்படங்களை வாங்கலாம். பல இணையதளங்கள்
நம் புகைப்படத்தை பதிவேற்ற காசு வசூலிக்கின்றனர் ஆனால்
இவர்கள் நாம் விற்கும் புகைப்படத்தில் சிறிய தொகையை
கமிஷனாக எடுக்கின்றனர் கண்டிப்பாக இந்த தளம் ஒவியத்
துறையில் உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை மக்கள் பணத்தை மொத்தமாக கொள்ளையடிக்கும் அரசியல்வாதி பெரும் நோயால் கொஞ்சம் கொஞ்சமாக அவதிப்படுவான்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.வெனீஸ் பட விழாவில் ஏழு பரிசுகளை வென்றப்படம் எது ? 2.முசோலினி எந்த நாட்டின் சர்வதிகாரியா இருந்தார் ? 3.வெறிநாய் கடிக்கு மருந்து தயாரிக்கும் இடம் தமிழகத்தில் எங்குள்ளது ? 4.லாட்டரியை அறிமுகப்படுத்திய நாடு எது ? 5.இந்தியாவின் இயற்கை அரண் எது ? 6.அமீபா எத்தனை செல் உயிரினம் ? 7.பழனிக்கு பண்டைய கால பெயர் எது ? 8.குடிக்கும் சோடாவில் கலந்துள்ள வாயு எது ? 9.உத்திரப்பிரதேசத்தின் இரண்டாவது பெண் முதல்வர் யார் ? 10.முதலை எத்தனை ஆண்டுகள் உயிர்வாழும் ? பதில்கள்: 1.செவன் சாமுராய், 2.இத்தாலி, 3.குன்னூர், 4.இங்கிலாந்து,5.இமயமலை, 6.ஒரே செல்,7.வையாபுரி, 8.கார்பன்டைஆக்சைடு,9.மாயாவதி,10.100 ஆண்டுகள்
இன்று மே 27பெயர் : ஜவஹர்லால் நேரு , மறைந்த தேதி : மே 27, 1964 நீண்டகாலம் தொடர்ந்து இந்தியாவின் பிரதம மந்திரியாக சேவை செய்தவர். இந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னோடியான நேரு காங்கிரஸ் கட்சியினால் தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் 1952 இல் இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதும் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவி ஏற்றார்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: ஆன்லைன் மூலம் நாம் வரைந்த ஒவியத்தை விற்று பணம் சம்பாதிக்கலாம்.
1.
செந்தழல் ரவி | 6:01 முப இல் மே 28, 2010
பரவாயில்லையே. ஓவியங்களிலும் விண்மனி டாட்டு வேர்டு பிரஸ்ஸு டாட் காம் என்று எழுதியே வரைகிறார்களே ?
2.
winmani | 6:52 முப இல் மே 28, 2010
@ நண்பருக்கு அது பதிவுத் திருடர்களுக்காக போட்டோஷாப் மூலம்
எழுதியது வரைந்தது அல்ல.
மிக்க நன்றி
3.
ஜெகதீஸ்வரன் | 3:39 பிப இல் மே 28, 2010
ஓவியர்களுக்கு மட்டுமல்ல என்னைப் போன்ற ஓவிய ஆர்வளர்களுக்கும், ரசனையுள்ளவர்களும் பயனுள்ள தளம் இது.
வாழ்க வளமுடன்.
– ந.ஜெகதீஸ்வரன்.
4.
winmani | 3:42 பிப இல் மே 28, 2010
@ ஜெகதீஸ்வரன்
மிக்க நன்றி