Archive for ஏப்ரல் 15, 2010
விண்வெளிக்கு நாசா அனுப்பும் பளு தூக்கும் ரோபோ மனிதன் சிறப்பு படங்களுடன்
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் விரைவில்
பளு தூக்கும் ரோபோ மனிதனை விண்வெளிக்கு அனுப்ப உள்ளது
பளு தூக்கும் ரோபோ மனிதனைப்பற்றிய சிறப்பு பதிவு படங்களுடன்.
படங்கள் நன்றி நாசா ஸ்லேஸ்டாட்
விண்வெளியில் சிறிய பிரச்சினை என்றாலும் உடனடியாக சில பேர்
விண்வெளிக்கு சென்று குறையை சரிசெய்ய வேண்டியிருக்கிறது
இதற்கு ஆகும் செலவு மட்டுமல்ல நீண்ட காலம் அங்கு தங்கி
இருந்து சில பிரச்சினைகளை சரி செய்யாமலே வந்துவிடுகின்றனர்.
உணவு, காலநிலை என பலவற்றால் மனிதன் பாதிக்கப்படுகிறான்
இந்த பெரும் பிரச்சினைக்கு தீர்வாக பிரேத்யேகமான சிறப்பு பளு
தூக்கும் ரோபோ ஒன்றை நாசா ஜெனரல் மோட்டார் நிறுவனத்தினர்
வடிவமைத்துள்ளனர். பார்ப்பதற்கு மனிதன் போலவே இருக்கும் இந்த
ரோபோ அதிக எடை கொண்ட பொருட்களை தூக்கும் வண்ணம்
வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் ரோபோனௌட் 2 ( R2).
விண்வெளியில் ஏற்படும் கோளாறை பூமியில் இருந்து கொண்டே
இந்த பளு தூக்கும் ரோபோவின் உதவியுடன் ரிமோட் மூலம்
கட்டளைகள் கொடுத்து சரி செய்யலாம் என்கின்றனர். இந்த வருடம்
செப்டம்பர் மாதத்தில் இந்த ரோபோ விண்வெளிக்கு செல்லும் என்று
எதிர்பார்க்கபடுகிறது. மனிதன் வேலை செய்யும் விதம் போல் தான்
இதன் அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது ரோபோ மனிதனின் சிறப்பு
படங்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
வின்மணி சிந்தனை பிறரை புறங்கூறி , பொய் சொல்லி பணம் சம்பாதிப்தைவிட உண்மையை (சத்தியத்தை) பேசி ஏழையாக இருப்பது எவ்வளவோ மேல்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1. விண்வெளி ஆய்வுக்கென்று பிரேத்யேகமாக தயாரிக்கப்பட்ட கம்ப்யூட்டர் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது ? 2. மனித உடலின் மிகப்பெரிய சுரப்பியின் பெயர் என்ன ? 3. பனிக்கட்டிகளால் சூழப்பட்ட கண்டம் எது ? 4. விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டின் பிறந்த நாடு எது ? 5. இந்தியக் காடுகளின் ராஜா என்று அழைக்கப்படுவது எது ? 6. மைசூர் புலி என்று அழைக்கப்பட்டவர் யார் ? 7. ஜப்பான் பாராளுமன்றத்தின் பெயர் என்ன ? 8. எதன் குறைவாக சோகை நோய் ஏற்படுகிறது ? 9. குள்ளமான மனிதர்களை உருவாக்கும் சுரப்பி எது ? 10. இலங்கையின் முக்கிய கோடைவாசல் தலம் எது ? பதில்கள்: 1.1962, 2.கல்லீரல், 3.அண்டார்டிக்கா, 4.ஜெர்மனி, 5.தேக்கு மரம்,6.திப்புசுல்தான், 7.டயட், 8.இரும்புச்சத்து, 9.பிட்யூட்டரி,10. நுவரேலியா
இன்று ஏப்ரல் 15பெயர் : லியொனார்டோ டாவின்சி பிறந்த தேதி : ஏப்ரல் 15, 1452 ஒரு புகழ் பெற்ற இத்தாலிய மறுமலர்ச்சிக் கட்டிடக்கலைஞரும், கண்டுபிடிப்பாளரும், பொறியியலாளரும், சிற்பியும், ஓவியரும் ஆவார். ஒரு பல்துறை மேதையாகக் கருதப்பட்டவர். குறிப்பாக இவரது, சிறப்பான ஒவியங்களுக்காகப் பரவலாக அறியப்பட்டவர். "கடைசி விருந்து" (The Last Supper), "மோனா லிசா" (Mona Lisa) போன்ற ஒவியங்கள் உலகப் புகழ் பெற்றவை.
100 மில்லியன் மக்கள் ஒபேரா இணைய உலாவி சாதனை
ஒபேரா இணைய உலாவி உலகெங்கும் உள்ள பல வாடிக்கையாளர்களை
பெற்று இன்று 100 மில்லியன் மக்கள் பயன்படுத்தும் ஒரு சிறந்த
உலாவியாக பயன்படுத்தப்படுகிறது இதைப்பற்றித்தான் இந்த பதிவு.
இணைய உலாவி என்றதும் நாம் உடனடியாக சொல்வது பயர்பாக்ஸ்,
இண்டர்நெட் எக்ஸ்பிளோரர், கூகுள் குரோம் மற்றும் ஒபேரா ஆனால்
பிரச்சினை இல்லாத வேகமான இணைய உலாவி என்று பல மக்களால
தேர்ந்தெடுக்கப்பட்ட பயர்பாக்ஸ் -ஐ விட 100 மில்லியன் மக்கள்
பயன்படுத்தும் ஒரு இணைய உலாவியாக இன்று ஒபேரா வந்திருக்கிறது
என்றால் அது அதன் கடின உழைப்பைத் தான் காட்டுகிறது. பயர்பாக்ஸ்-ல்
சில இணையதளங்களுக்கு சென்றதும் அது தானாகவே மூடிவிடும்
ஆனால் இந்த பிரச்சினை தற்போது வெளிவந்துள்ள ஒபேராவில் இல்லை
அதுமட்டுமின்றி ஒபேராவின் மினி இணைய உலாவி இன்று அனைத்து
மொபைல்களையும் ஆக்கிரமித்துள்ளது. பயன்பாடு சிறப்பாக இருந்த
காரணத்தால் இன்று அனைவரும் பயன்படுத்தும் ஒரு சிறந்த இணைய
உலாவியாக மக்களிடம் இலவசமாக தன் சேவையை அளிக்கிறது.
வின்மணி சிந்தனை மக்களுக்கு உண்மையான சேவை செய்ய நினைக்கும் யாரும் தன் பெருமைக்காக செய்யவில்லை மாறாக மக்களின் மேல் உள்ள உண்மையான அன்பினால் தான் சேவை செய்கின்றனர்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1. உலகில் மிக அதிகமாக பேசப்படும் மொழி எது ? 2. பச்சையம் இல்லாத தாவரம் எது ? 3. மேட்டூர் அனையின் வேறு பெயர் என்ன ? 4. மனித உரிமைதினம் எந்த நாள் கொண்டாடப்படுகிறது ? 5. ரேடியோ அலைகளின் வேகம் மணிக்கு எத்தனை கி.மீ ? 6. ஏரி மாவட்டம் என்பது எது ? 7. ஜெய்ஹிந்த் எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது ? 8. ஒரு தீக்கோழியின் முட்டை எத்தனை கோழி முட்டைகளுக்குச் சமம் ? 9. கணித மேதை இராமானுஜம் பிறந்த ஊர் எது ? 10. மிக உயரமான எரிமலை எது ? பதில்கள்: 1.சீன மொழி,2.காளான், 3.ஸ்டான்லி அனை, 4.டிசம்பர் 10,5.3 இலட்சம்,6.செங்கல்பட்டு 7.முண்டக உபநிடதம்,8.30 கோழிமுட்டைகளுக்கு சமம், 9.கும்பகோணம்,10. கேடபாக்சி
இன்று ஏப்ரல் 14பெயர் : இரமண மகரிஷி மறைந்த தேதி : ஏப்ரல் 14, 1950 தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதி ஆவார். அத்வைத வேதாந்த நெறியை போதித்த இவர் திருவண்ணாமலையில் வாழ்ந்தவர். இங்கு அமைந்துள்ள, 'ரமண ஆசிரமம்', உலகப் புகழ் பெற்றதாகும். இன்றளவும், ஆன்ம முன்னேற்றம் பெற உலகத்தின் பல பகுதிகளில் இருந்தும், பலர் அன்றாடம் இரமணாசரமத்தினை நாடி வந்த வண்ணம் உள்ளனர். உங்களால் இந்தியாவுக்கு பெருமை.