Archive for பிப்ரவரி 17, 2010
உலக அளவில் நீச்சல் வீரர்களை இணைக்கும் புதிய இணையதளம்
நீச்சல் என்றாலே நமக்கு அலாதி பிரியம் தான் என்று
நினைக்கும் நீச்சல் வீரர்கள் பலபேர் இன்னும் வெளிஉலகத்துக்கு
செல்லாமலே இருந்து விடுகின்றனர். கிராமத்து இளைஞர் முதல்
நகரத்து இளைஞர் வரை அனைவருக்கும் நீச்சல் என்றால் என்ன
என்பதிலிருந்து நீச்சல் பற்றிய அனைத்து விபரங்களையும் தெரிந்து
கொள்ளலாம் அதோடு இந்த ஆண்டு எங்கெல்லாம் நீச்சல் போட்டி
நடக்கிறது என்பதை பற்றிய அனைத்துவிபரங்களையும் நமக்கு
தர ஒரு பயனுள்ள இணையதளம் உள்ளது அதைப்பற்றி தான்
இந்த பதிவு.
நீங்கள் உள்ளூர் நீச்சல் வீரராக இருந்தால் உங்களுக்கென்று ஒரு
புதிய கணக்கை இலவசமாக இந்த இணையதளத்தில் உருவாக்கி
கொள்ளுங்கள்.நீச்சல் பற்றி உங்களுக்கு எழும் கேள்விகள்
அனைத்தையும் கேளுங்கள் உதாரணமாக ஒரு போட்டியில் பங்கு
பெற வேண்டுமானால் வயது வரம்பு எப்படி இருக்க வேண்டும்
இதற்கு முன் பங்கு பெற்றவர்கள் எவ்வளவு நேரத்தில் கடந்தார்கள்
என்ற அனைத்து கேள்விகளையும் கேட்கலாம். உங்களுக்க்கென்று
உள்ள தனித்திறமைகளைகூட நீங்கள் உங்கள் தகவல் தெரிவிக்கும்
போது கொடுக்கலாம். இதில் என்ன விஷேசம் என்றால் இந்த
இணையதளம் ஒரு நாட்டுக்கு மட்டும் அல்ல அனைத்து நாட்டு
நீச்சல் வீரர்களையும் இணைக்கும் ஒரு பாலமாகவே இருந்து
வருகிறது.நீச்சல் துறையில் இன்னும் சாதிக்க வேண்டும் என்ற
எண்ணம் உள்ள நம் நண்பர்களுக்கு இந்த இணையதளத்தைப்பற்றி
தெரிவியுங்கள் அவர்களுக்கு மேலும் பயனுள்ளதாக இருக்கும்.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் ஜாவாவில் பயன்படுத்தும் Reserved words. abstract Break case try default double Const for if import new switch package protected continue while this throws goto synchronized boolean Byte super Catch do public final interface implements transient short void private extends char finally throw int long static else return volatile class instanceof null float native
இன்று பிப்ரவரி 17பெயர் : ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, மறைந்த தேதி : பிப்ரவரி 17, 1986 இந்திய தத்துவ மெய்யறிவாளர்களுள் முக்கியமானவர்.உலகளவிலும் முக்கியமான தத்துவ ஆசிரியர்களுள் ஒருவராக மதிக்கப்படுகிறார்.பல நாடுகளிலுள்ள மக்களைச் சந்தித்து சொற்பொழிவுகளையும் கலந்துரையாடல்களையும் நிகழ்த்தினார்.அன்றாட மனிதவாழ்வில் அவனுக்குத் தோன்றும் எண்ணங்களையும் உணர்வுகளையும் விழிப்புணர்வுடன் கவனிப்பதன் மூலம் மனிதன் தன்னையே உருமாற்றிக் கொள்ள முடியும் என்று கூறி வந்தார்.