Archive for பிப்ரவரி 3, 2010
பேப்பர் அட்டையை வெட்டி பல அதிசயங்களை உருவாக்கலாம்
குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பயன் தரும்
வகையில் பேப்பர் அட்டையை வைத்து பல வடிவங்களை யார்
துணையும் இல்லாமல் நாமே உருவாக்கலாம் அப்படி என்ன
உருவாக்கலாம் என்று கேட்கிறீர்களா கிறிஸ்துமஸ் மரத்தியிருந்து
டைனோசர் வரை அத்தனையும் உருவாக்காலாம் எந்த செலவும்
இல்லாமல் யாராது நமக்கு சொல்லி தருவார்களா என்று பார்த்தால்
இலவசமாகவே அத்த்னை வடிவத்தையும் பேப்பரில் நாம் எப்படி
உருவாக்கலாம் என்ற எளிய செயல் முறை விளக்கத்துடனும்
அனிமேசனுடன் சொல்லித்தருகிறார்கள்.ஒவ்வொரு படியும் (step)
நாம் நிறுத்தி பார்த்துக்கொள்ளும் வசதியும் உள்ளது.
ஒரு மீன் செய்வதில் இருந்து ஆடை டிசைன் செய்வது வரை
அத்தனையும் அட்டையில் எப்படி உருவாக்குவது என்று சொல்லி
தருகின்றனர். குழந்தைகளுக்கான ABCD உருவாக்குவதை கூட
எளிதாக நாம் உடனே செய்யும் வகையில் சொல்லி தருகின்றனர்.
திருமண அட்டை எப்படி செய்யலாம், பூக்களை அட்டையில்
உருவாக்குவது எப்படி,விலங்குகளின் வடிவங்கள்,உணவு வகைகள்
காய்கறிகளை கூட நாங்கள் அட்டையில் எப்படி செய்யலாம் என்று
சொல்லி தருகிறோம். அட்டையில் புதிதாக ஏதாவது செய்ய
வேண்டும் என்ற ஆசை உள்ள அனைவருக்கும் குழந்தைகளுக்கு
பாடம் சொல்லி கொடுக்கும் மதிப்புமிக்க ஆசிரியர்களுக்கும் இந்த
இணையதளம் கண்டிப்பாக உதவும்.
இணையதள முகவரி: http://www.origami-club.com/en/
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் String -ஐ integer ஆக மாற்ற உதவும் எளிய நிரல் public static void main(String[] args) { String yourString = "420"; int yourInt = Integer.parseInt(yourString); System.out.println(yourInt); }
இன்று பிப்ரவரி 3பெயர் : கா.ந.அண்ணாதுரை, மறைந்த தேதி : பிப்ரவரி 3, 1969 தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சர். மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தவர்.குடியரசுனாதிற்குப்பிறகு ஆட்சி அமைத்த முதல் திராவிடக்கட்சித்தலைவர் என்றப் பெருமையுடன்,அருதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர். ”ஒன்றே குலம், ஒருவனே தேவன்”,"கடவுள் ஒன்று, மனிதநேயமும் ஒன்று தான்"என்ற உயர்ந்த தத்துவங்களை கொண்டவர்.கடமை கண்ணியம் கட்டுபாடு என்ற கொள்கை பிடிப்புள்ளவர்.