Archive for ஜூன் 17, 2010
ஆங்கிலத்தில் சம்பிரதாய கடிதங்கள் இனி எளிதாக எழுதலாம்
பள்ளி முதல் கல்லூரிவரை , அலுவலகங்கள் முதல் சொந்தபந்தங்கள்
வரை அனைவருக்கும் ஆங்கிலத்தில் சம்பிரதாயமான கடிதம் இனி
எளிதாக எழுதலாம் எப்படி என்பதைப்பற்றி தான் இந்த பதிவு.

தமிழ் கடிதம் எழுத சொன்னால் உடனடியாக எழுதும் நம் தமிழ்
நண்பர்களுக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுத கூறினால் சற்று யோசித்து
எழுதுகின்றனர்.அலுவலகத்துக்கோ, கல்லூரிக்கோ அல்லது அரசுக்கோ
கடிதம் எழுத கூறினால் அவர்கள் கூறும் முதல் வார்த்தை எங்களுக்கு
அனுபவம் இல்லை என்று, அனுபவம் இருந்தாலும் ஆங்கிலத்தில்
எழுதினால் இலக்கண பிழை ஏற்படுமோ என்ற பயம் உள்ளது.
ஆங்கிலத்தில் இனி எந்த கடிதம் வேண்டுமானாலும் எழுதலாம் நமக்கு
உதவுவதற்க்காகவே ஒரு இணையதளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.readwritethink.org/files/resources/interactives/letter_generator/

இந்த தளத்திற்க்கு சென்று நம் பெயரைக் கொடுத்து எளிதாக எந்த
கடிதம் வேண்டுமானாலும் உருவாக்கலாம். சம்பிரதாய கடிதங்கள் எப்படி
இருக்கவேண்டுமோ அப்படி இருக்க நமக்கு ஒவ்வொரு படியையும்
கையைப்பிடித்து அழைத்துச்செல்கிறது. எந்த இடத்தில் எதற்க்காக என்ன
பெயர் கொடுக்க வேண்டும் என்றும் அலுவலகத்தில் சம்பள உயர்வு
வேண்டும் என்றால் எப்படி கடிதம் எழுத வேண்டும் யாருக்கு எந்த
பதிவியில் இருப்பவர்களுக்கு எழுதவேண்டும், எதை மையப்படுத்தி
நாம் கேட்க வேண்டுவதை ஆங்கிலத்தில் எப்படி எல்லாம் எளிய
முறையில் இலக்கண பிழை இல்லாமல் எழுதலாம் போன்ற அத்தனை
தகவல்களையும் கொண்டு நம்மை ஆங்கிலத்தில் சம்பிரதாய கடிதங்கள்
எழுத உதவுகிறது. பார்ப்பதற்க்கு எளிதாக எந்த விளம்பரமும் இல்லாமல்
தெரிகிறது. கண்டிப்பாக இந்த இணையதளம் நமக்கு பயனுள்ளதாக இருக்கும்
வின்மணி சிந்தனை அரை குறை படித்தவர்கள் எவ்வளவு தான் துதிபாடி உயர்ந்த பதவிக்கு சென்றாலும் என்றாவது ஒரு நாள் உண்மை வெளியே தெரியும் அப்போது பிறரால் ஒதுக்கப்படுவார்கள்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.உலகிலேயே அதிக கோட்டைகள் உள்ள நாடு எது ? 2.தந்தி முறை கண்டுபிடிக்கப்பட்டு அனுப்பப்பட்ட முதல் வாசகம் என்ன ? 3.FIAT கார் எப்போது வெளிவந்தது ? அதன் முழுப்பெயர் என்ன? 4.தென்கிழக்கு ஆசிய நாடுகளிலே மிகப்பெரிய உயரியல் பூங்கா எங்குள்ளது ? 5.புத்தர் பிறந்த இடம் எது ? 6.சமாதானத்தின் சின்னமாக வெண்புறாவை அமைத்துக் கொடுத்தவர் யார் ? 7.இந்தியாவில் டி.வி எப்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டது ? 8.முதன் முதலாக தேசிய கீதம் எந்த நாட்டில் தோன்றியது ? 9.இந்தியாவில் முதன் முறையாக சிமெண்ட் எங்கு எப்போது தயாரிக்கப்பட்டது? 10.சென்னையில் முதல் திரையரங்கு எப்போது கட்டப்பட்டது ? பதில்கள்: 1.செக்கோஸ்லோவாகியா, 2.What hath God Wrought 3.1899,Febrica Italiana Automobile Torino , 4.அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா சென்னை வண்டலூர், 5.லும்பினி,6.ஒவியர் பிக்காஸோ,7.15-09-1959-ல்,8.ஜப்பான், 9.சென்னை 1904 ஆம் ஆண்டு,10.1900ஆம் ஆண்டு
இன்று ஜூன் 17பெயர் : ஜான்சி ராணி லட்சுமிபாய் , மறைந்த தேதி : ஜூன் 17, 1858 வட இந்தியாவின் ஜான்சி நாட்டின் இராணி. 1857 இந்தியக் கிளர்ச்சியில் பெரும் பங்காற்றி இந்தியாவில் பிரிட்டனின் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தோர்களின் முன்னோடியாகக் கணிக்கப்படுகிறவர்.வெள்ளையர் எதிர்ப்புக்காக நேதாஜி பெண்கள் படை உருவாக்கியபோது அதற்கு "ஜான்சிராணி ரெஜிமெண்ட்" என்று பெயரிட்டார்.
பெயர் : 




